News October 23, 2024

 புத்துயிர் பெறுமா பவானி புதிய பஸ் நிலையம் ?

image

பவானி நகராட்சியில் மேட்டூர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் கடந்த 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. பஸ் நிலையம் கட்டப்பட்டு 35 வருடங்களுக்கு மேலாவதால் கட்டுமானங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. எனவே, அனைத்து வசதிகளுடன் பவானி புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்தி, புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News

News November 19, 2025

ஈரோடு: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க

image

ஈரோடு மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)

News November 19, 2025

அந்தியூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிந்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பிரம்மதேசம் பெட்ரோல் பங்க் அருகே, ராஜ்குமார் என்பவர் வாகனம் மோதி பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 19, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, கே.கே.நகா், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம் முத்தம்பாளையம், சிப்காட், சின்ன (ம) பெரிய வேட்டுவபாளையம், மோளகவுண்டன்பாளையம், போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், மேக்கூா், பெருந்துறை மேற்குப்பகுதி, கோவை சாலை, சின்ன(ம) பெரியமடத்துபாளையம், உட்பட பல ஆகிய பகுதிகளில் நாளை நவ.20 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது

error: Content is protected !!