News December 31, 2024

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 546 காவலர்கள்

image

 புத்தாண்டை முன்னிட்டு இன்று (டிச.31) மற்றும் நாளை (ஜன.1) ஆகிய தினங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 19 காவல் ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள்/சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 546 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News August 11, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் இன்று சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் போதைப்பொருள் எதிர்ப்பு சிப்பாயாக இருங்கள், ஒன்றாக நாம் ஒரு போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும் எனவும், வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள் மருந்துகளை அல்ல எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குங்கள்!

News August 11, 2025

ராணிப்பேட்டை BHEL-இல் சூப்பர் வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாட்டில் செயல்படும் ஆலை உட்பட மத்திய அரசின் 11 BHEL ஆலைகளில் ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலெக்ட்ரிசியன் உட்பட பல பதவிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. தகுதி: ITI, சம்பளம்: ரூ.29,500-ரூ.65,000. வயது: OBC-30, SC/ST-32, EWS-27. தேவைப்படுவோர் <>இந்த லிங்கின்<<>> மூலம் நாளைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு ராணிப்பேட்டை BHEL -04172‑241112. சூப்பர் வாய்ப்பு. நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News August 11, 2025

ராணிப்பேட்டை: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை!

image

அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் பகுதியை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி சுதாகர் (45). இவரிடம் பணிபுரிந்தவர் அபினேஷ் (31). இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அபினேஷ் சுதாகரை கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்காக அபினேஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். ரத்தனகிரி காவல் நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 10) கையெழுத்திட சென்ற போது அபினேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

error: Content is protected !!