News January 1, 2025

புத்தாண்டு கொண்டாட தொடங்கிய ஈரோடு மக்கள்

image

நள்ளிரவு 12 மணிக்கு 2024 ஆம் ஆண்டு விடைபெற்று, 2025 ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. கடந்த ஆண்டுக்கு பிரிவு உபசாரம் நடத்தி, புதிய ஆண்டை வரவேற்க, ஈரோடு மக்கள் தயாராகி விட்டனர். அதன் பிரதிபலிப்பாக, பன்னீர்செல்வம் பூங்கா நினைவு தேவாலயம் முன்பு, ஏராளமானவர்கள் கூடி நிற்கின்றனர். இனிய புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இரவு 10 மணியில் இருந்தே, பட்டாசு வெடிக்க மக்கள் தொடங்கிவிட்டனர்.

Similar News

News October 15, 2025

ஈரோடு வீடு கட்ட ரூ.2.10 லட்சம் வேண்டுமா?

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News October 15, 2025

ஈரோடு 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

News October 15, 2025

ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்கள் விடுமுறை!

image

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, ஈரோடு சொசைட்டி, கோபி என, 4 இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.தீபாவளி பண்டிகைக்காக ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு வரும், 20 முதல், 22 வரை, 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சனி,ஞாயிறு விடுமுறை நாட்களை சேர்த்தால் 5 நாட்கள் தொடர் விடுமுறையாகிறது.வரும், 23ம் தேதி மஞ்சள் வர்த்தகம் நடைபெறும் என மஞ்சள் கிடங்கு மற்றும் வணிகர் சத்தியமூர்த்தெரிவித்தார்

error: Content is protected !!