News January 1, 2025
புத்தாண்டு கொண்டாட தொடங்கிய ஈரோடு மக்கள்

நள்ளிரவு 12 மணிக்கு 2024 ஆம் ஆண்டு விடைபெற்று, 2025 ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. கடந்த ஆண்டுக்கு பிரிவு உபசாரம் நடத்தி, புதிய ஆண்டை வரவேற்க, ஈரோடு மக்கள் தயாராகி விட்டனர். அதன் பிரதிபலிப்பாக, பன்னீர்செல்வம் பூங்கா நினைவு தேவாலயம் முன்பு, ஏராளமானவர்கள் கூடி நிற்கின்றனர். இனிய புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இரவு 10 மணியில் இருந்தே, பட்டாசு வெடிக்க மக்கள் தொடங்கிவிட்டனர்.
Similar News
News November 28, 2025
BREAKING ஈரோடு: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

தவெகவில் இணைந்த செங்கோட்டையைன், ஈரோடு செல்வதற்காக இன்று சென்னையில் இருந்து, விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தவெகவிற்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. வரும் 2026ம் ஆண்டில் விஜய் முதலமைச்சராக வருவார். அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன். விஜய் உடன் தான் மக்கள் சக்தி உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை தவெகவிற்கு பணியாற்றுவேன்” என தெரிவித்தார்.
News November 28, 2025
ஈரோட்டில் இலவச லாரி ஓட்டுநர் பயிற்சி!

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வரும் டிச.17ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி, சரக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News November 28, 2025
அம்மாபேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்

அம்மாபேட்டை அருகே சொட்டையனூர் பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை கடத்த முயன்ற சங்ககிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் 32 மற்றும் சித்தார் பகுதியை சேர்ந்த முனியசாமி 50 ஆகிய இருவரை பிடித்த அம்மாபேட்டை போலீசார் 10 கிலோ குட்கா பாதை பொருட்களை பறிமுதல் செய்து இருவரும் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


