News January 1, 2025
புத்தாண்டு கொண்டாட தொடங்கிய ஈரோடு மக்கள்

நள்ளிரவு 12 மணிக்கு 2024 ஆம் ஆண்டு விடைபெற்று, 2025 ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. கடந்த ஆண்டுக்கு பிரிவு உபசாரம் நடத்தி, புதிய ஆண்டை வரவேற்க, ஈரோடு மக்கள் தயாராகி விட்டனர். அதன் பிரதிபலிப்பாக, பன்னீர்செல்வம் பூங்கா நினைவு தேவாலயம் முன்பு, ஏராளமானவர்கள் கூடி நிற்கின்றனர். இனிய புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இரவு 10 மணியில் இருந்தே, பட்டாசு வெடிக்க மக்கள் தொடங்கிவிட்டனர்.
Similar News
News November 8, 2025
ஈரோடு மக்களே மிக முக்கியம் பாருங்க!

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை<
News November 8, 2025
ஈரோடு: வங்கியில் வேலை! விண்ணப்பிக்கவும்

ஈரோடு மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)
News November 8, 2025
FLASH: ஈரோட்டில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பேராசிரியைக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக கல்லூரி மாணவிகள், பேராசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


