News January 2, 2025

புத்தாண்டில் விதிமீறல்! 500-க்கும் மேற்பட்ட வழக்குகள்!

image

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக வாகன ஓட்டிகள் பைக் ரேஸ் போன்ற சம்பவங்களிலும், வாகன விதி மீறல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகன விதிமீறல்களில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News July 10, 2025

தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ரோந்துபணிகளை விளாத்திக்குளம் DSP அசோகன் மேற்கொள்கிறார். அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 9514144100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News July 10, 2025

தூத்துக்குடி: குரூப் 4 தேர்வு: 37,005 பேர் எழுதுகின்றனர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நாளை மறுநாள் (ஜூலை 12) அன்று குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டையாபுரம் உள்ளிட்ட 10 வட்டங்களில் 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 37,005 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 31 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

தூத்துக்குடி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!