News January 2, 2025

புத்தாண்டில் விதிமீறல்! 500-க்கும் மேற்பட்ட வழக்குகள்!

image

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக வாகன ஓட்டிகள் பைக் ரேஸ் போன்ற சம்பவங்களிலும், வாகன விதி மீறல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகன விதிமீறல்களில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

தூத்துக்குடி: கணவருடன் சென்ற பெண் சாலை விபத்தில் பலி..!

image

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செட்டிகுறிச்சியைச் சேர்ந்த மேசியார் தாஸ் என்பவர், மனைவி வனிதா மற்றும் குழந்தை சஞ்சனாவுடன் டூவீலரில் சாத்துாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சாத்துார் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார், டூவீலரில் மோதியதில் வனிதா சம்பவ இடத்திலேயே பலியானார்.

News September 16, 2025

தூத்துக்குடி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

image

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

தூத்துக்குடி: குலசை கடற்கரையில் பெண் சடலமாக மீட்பு

image

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தெற்கு பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் கரை ஒதுங்கியதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!