News January 2, 2025

புத்தாண்டில் விதிமீறல்! 500-க்கும் மேற்பட்ட வழக்குகள்!

image

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக வாகன ஓட்டிகள் பைக் ரேஸ் போன்ற சம்பவங்களிலும், வாகன விதி மீறல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகன விதிமீறல்களில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

கள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் நாளை பிற்பகல் வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கள அலுவலர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக்<<>> செய்து பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 28, 2025

தூத்துக்குடி: மகனுக்கு கத்திக்குத்து.. தந்தை கைது

image

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவரது மனைவி பரமேஸ்வரி குடும்ப தகராறில் கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் முத்தையாபுரத்தில் வசித்து வருகிறார். இசக்கி பாண்டி நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் தகராறு ஈடுபட்டு, மனைவியை கத்தியால் குத்த பயந்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அவரது மகன் சந்தோஷ் என்ற சிறுவன் காயமடைந்தான். இது சம்பந்தமாக, முத்தையாபுரம் போலீசார் இசக்கி பாண்டியை கைது செய்தனர்.

error: Content is protected !!