News January 2, 2025
புத்தாண்டில் விதிமீறல்! 500-க்கும் மேற்பட்ட வழக்குகள்!

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக வாகன ஓட்டிகள் பைக் ரேஸ் போன்ற சம்பவங்களிலும், வாகன விதி மீறல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகன விதிமீறல்களில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
தூத்துக்குடி: பாட்டியை அரிவாளால் வெட்டிய கொடூரன்!

தூத்துக்குடி போல்பேட்டை சேர்ந்த சமாரிமுத்து (23), இவர் தனது பாட்டியான கருப்பாயி அம்மாள் (62) என்பவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த கருப்பாயி அம்மாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் மாரிமுத்து கைது செய்தனர்.
News December 23, 2025
தூத்துக்குடி: ரயில் மோதி பரிதாப பலி!

தூத்துக்குடி கே.டி.சி நகரை சேர்ந்தவர் சுந்தரவேல் (47). இவர் கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் மனநல சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக நெல்லை வந்தார். குலவணிகர்புரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருச்செந்தூர் நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 23, 2025
தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


