News January 2, 2025
புத்தாண்டில் விதிமீறல்கள் தொடர்பாக 325 வழக்குகள் பதிவு

மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நகரில் குடிபோதையில் வாகனங்களில் வந்தவர்கள், டூவீலர் ரேசில் ஈடுபட்டோர் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரே இரவில் 325 வழக்குகளை மாநகர் போலீசார் பதிவு செய்தனர். அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 28, 2025
மதுரை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! APPLY NOW

மதுரை மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <
News November 28, 2025
மதுரை: சகோதரியின் வீட்டை அடித்து நொறுக்கிய முதியவர்கள்

மதுரை அருகே காஞ்சரம் பேட்டையை சேர்ந்த பஞ்சவர்ணம்(56), அவரது வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு வீடு கட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது சகோதரர் முத்துமாயி(70), பழனியம்மாள்(60) ஆகியோர் சேர்ந்து அந்த இடம் தனக்கு தந்தை கொடுத்ததாக கூறி பஞ்சவர்ணத்துடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.
News November 28, 2025
மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

மதுரை அருகே தென்னூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (50 ). இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்டிடப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்றபடி கம்பி கட்டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


