News January 2, 2025
புத்தாண்டில் விதிமீறல்கள் தொடர்பாக 325 வழக்குகள் பதிவு

மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நகரில் குடிபோதையில் வாகனங்களில் வந்தவர்கள், டூவீலர் ரேசில் ஈடுபட்டோர் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரே இரவில் 325 வழக்குகளை மாநகர் போலீசார் பதிவு செய்தனர். அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


