News September 28, 2024
புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி – ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் அடுத்த மாதம் மூன்றாம் தேதி புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா துவங்க உள்ளது. இதனை ஒட்டி பொதுமக்களிடம் வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது நூலகத்துறை மற்றும் வாசகர் வட்டம் சார்பில் வாசிப்பு வானமே எல்லை என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
கல்லால் தாக்கி கொலை 4 பேருக்கு ஆயுள்

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்கு குளி காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ராஜா கணேசன் முத்துச் செல்வனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு இந்த நான்கு பேரும் சேர்ந்து முருகனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். வழக்கு தூத்துக்குடி நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கருப்பசாமி உட்பட 4 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
News November 14, 2025
தூத்துக்குடி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தூத்துக்குடி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<
News November 14, 2025
தூத்துக்குடி மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழைக்காலங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இடி, மின்னல் நேரங்களில் பழமையான கட்டிடம், மரங்கள், மின்கம்பங்கள் அருகில் இருக்காமல் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். பெரியவர்கள், குழந்தைகள் நீர் நிலைகளை தவிர்க்க வேண்டும். மேலும் மழைக்காலத்தில் திமுகவினர் தங்கள் பகுதி மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்


