News August 17, 2024

புத்தகத் திருவிழாவில் வினாடி வினா போட்டிகள்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டிகள் நாளை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையாளராக இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 20, 2025

விருதுநகர்: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

image

விருதுநகர் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு10th தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு <>CLICK <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News November 20, 2025

விருதுநகர்: மூதாட்டி கொலை மருமகள் உட்பட 3 பேர் கைது

image

சிவகாசி அருகே செவலுாரை சேர்ந்தவர் லட்சுமி 64. இவரது மகன் பாலமுருகனுக்கும் 39, அதே பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகள் முருகேஸ்வரிக்கும் 39, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் முருகேஸ்வரி கோபித்து தாய் வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் முருகேஸ்வரியின் தம்பி சங்கிலி பாண்டி 36, லட்சுமியை கட்டையால் அடித்ததில் நேற்று அதிகாலை இறந்தார்.

News November 20, 2025

விருதுநகர்: ஒரே மாதத்தில் 200 பேர் பாதிப்பு

image

காரியாபட்டி அருகே நேற்று இரவு எஸ்.தோப்பூரில் விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த் 12, ரிதன் 12 உள்ளிட்ட 7 பேரை நாய் கடித்தது.இதேபோல் சில தினங்களுக்கு முன் ஆவியூரில் 15க்கும் மேற்பட்டோரை கடித்தது. காரியாபட்டியில் ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்து ரேபிஸ் தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

error: Content is protected !!