News February 18, 2025
புத்தகக் கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி ஆய்வு

நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் நாளை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. மார்ச் 1ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பள்ளி வளாகத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அரங்குகளை நேற்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த புத்தகக் கண்காட்சியில் 1 லட்சம் புத்தகங்கள் வரை இடம்பெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 22, 2025
குமரி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 22, 2025
குமரி: மயங்கி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் பெல் லார்மின். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். திருமணம் ஆகாத நிலையில் தம்பி ஸ்டாலின் ஜோஸ் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கேரளாவில் தொழிலுக்கு சென்றுவிட்டு கடந்த 18-ம் தேதி வீட்டிற்கு சென்ற நிலையில் சமையலறையில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News December 22, 2025
குமரி: மாணவி செயலால் பரபரப்பு!

நாகர்கோவில் வல்லன்குமரன்விளை பகுதி நீர்த்தேக்க தொட்டியின் மீது நேற்று முன் தினம் மாணவி ஒருவர் ஏறி நின்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவியை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் மாணவி இறங்காததால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கீழே இறங்கிய மாணவியிடம் விசாரணை செய்ததில் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தொட்டியின் மேல் ஏறி நின்றதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


