News February 18, 2025

புத்தகக் கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி ஆய்வு

image

நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் நாளை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. மார்ச் 1ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பள்ளி வளாகத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அரங்குகளை நேற்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த புத்தகக் கண்காட்சியில் 1 லட்சம் புத்தகங்கள் வரை இடம்பெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 18, 2025

கன்னியாகுமரி பகவதி அம்மன் நவராத்திரி திருவிழா தேதி!

image

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலய நவராத்திரி திருவிழா வரும்  செப்.23ம் தேதி துவங்கி அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.  விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10ம் திருவிழா நாளான அக்டோபர் 2ம் தேதி  காலை அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் பரிவேட்டைக்கு புறப்படுதல், இரவு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு  ஆகியன நடக்கிறது.

News September 18, 2025

7524 மனுக்களுக்கு இதுவரை தீர்வு – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 16.09.2025 வரை 210 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு 1,05,305 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர்மாற்றம், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட 7524 மனுக்களுக்கு இதுவரையிலும் தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடி

image

காஞ்சான்காடு பகுதியை சேர்ந்த பிரவின் ஜோஸ் உட்பட 6 பேர்    சிங்கப்பூர் சுற்றுலா செல்ல திருவனந்தபுரம் தனியார் டிராவல் ஏஜென்சியிடம் ரூ3,36,400 அளித்துள்ளனர். ஒரு ஆண்டுகளாகியும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாததால் ஏஜென்சி மேலாளர் அகஸ்டின்தாஸ் உட்பட 2 பேர் மீது  வழக்கு தொடரப்பட்டது. அதில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் களியக்காவிளையில் அகஸ்டின் தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!