News February 18, 2025
புத்தகக் கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி ஆய்வு

நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் நாளை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. மார்ச் 1ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பள்ளி வளாகத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அரங்குகளை நேற்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த புத்தகக் கண்காட்சியில் 1 லட்சம் புத்தகங்கள் வரை இடம்பெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 10, 2025
குமரி மாவட்டத்தில் 51 போக்சோ வழக்குகள்

குமரி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் 51 போக்சோ வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
குமரி: சொத்து தகராறில் தம்பியின் உதட்டை கடித்த அண்ணன்

மஞ்சாலுமூடு விஜயகுமார் (50). இவரது தம்பி சுனில் குமார் (42) தொழிலாளர்களான இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனையில் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் டிச.8ம் தேதி உத்தரகோணம் பகுதியில் வைத்து விஜயகுமார், சுனில் குமாரை தாக்கியுள்ளார். பின் விஜயகுமார், சுனில் குமார் உதட்டை கடித்து இழுத்தார். இதில் காயமடைந்த சுனில்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அருமனை போலீசார் வழக்குப்பதிவு.
News December 10, 2025
குமரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

குமரி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


