News April 11, 2025
புதுவை PRTC ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பி.ஆர்.டி.சி.யில் 276 ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். நேற்று போக்குவரத்துதுறை ஆணையர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ நேரு ஏற்பாடு செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தர கோரிக்கைகயை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
Similar News
News October 16, 2025
புதுவை: குடியரசு துணைத் தலைவரை சந்தித்த சபாநாயகர்

புது டெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.பி. ராமலிங்கம் மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் ஆண்டியார் பாளையம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
News October 15, 2025
புதுவையில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

புதுவை, அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவபாண்டியனுக்கு, சத்யா என்ற மனைவி உள்ளார். சிவபாண்டியன் தினமும் மது குடித்து வந்தார். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட அவர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மன உளைச்சலில் இருந்த சிவபாண்டியன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News October 15, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.