News April 11, 2025
புதுவை PRTC ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பி.ஆர்.டி.சி.யில் 276 ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். நேற்று போக்குவரத்துதுறை ஆணையர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ நேரு ஏற்பாடு செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தர கோரிக்கைகயை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
Similar News
News December 16, 2025
புதுச்சேரி: பண இழப்பை தவிர்க இத செய்ங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
புதுச்சேரி: சாதி, வருமான சான்றிதழ் தேவையில்லை

புதுச்சேரி, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக, சமீபத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் மின்சார மூன்று சக்கர வாகனம் வாங்க வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கு, புதிதாக சாதி சான்றிதழ் மற்றும் வருமான
சான்றிதழ் பெற தேவையில்லை என்றார்.
News December 16, 2025
புதுச்சேரி: மீனவரை வெட்டிய 8 வாலிபர்கள் கைது

புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே மீனவர் வெற்றிவேல் (45), மற்றும் மனைவி சசிகுமாரியை ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாறியாக வெட்டி தாக்கினர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழிவாங்கும் நோக்கில் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பூரணாங்குப்பத்தை சேர்ந்த 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மறியல் நடத்திய மீனவர்களிடம் எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினர்.


