News April 11, 2025
புதுவை PRTC ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பி.ஆர்.டி.சி.யில் 276 ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். நேற்று போக்குவரத்துதுறை ஆணையர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ நேரு ஏற்பாடு செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தர கோரிக்கைகயை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
Similar News
News December 23, 2025
காரைக்கால்: அரசு ஊழியர்களுக்கு அரசாணை வெளியீடு

காரைக்கால் (டிச.23) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் பணியின் போதோ, அல்லது ஒய்வு பெற்றோ இறந்துவிட்டால், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், மற்றும் நிதி சார்ந்த தணிக்கைத் தடைகள் அனைத்தும் தானாகவே ரத்தாகிவிடும். அது சார்ந்து எந்தவித ஒய்வூதியப் பலன்களையும் நிறுத்தக் கூடாது என அரசாணை வெளியிட்டுள்ளது.
News December 23, 2025
புதுவை: ஆளுநர் பெயரில் ஹரியானாவை சேர்ந்தவர் மோசடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெயரில் முகநுால் கணக்கு துவங்கி, பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட முயற்சி செய்த இணையவழி மோசடி கும்பல் மீது, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணின் முகவரி ஹரியானா என தெரிய வந்துள்ளது.
News December 23, 2025
புதுச்சேரி: அரசு காலண்டர் வெளியீட்டு விழா

புதுச்சேரி அரசு 2026 ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா, இன்று சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி காலண்டரை வெளியிட்டார். இதில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அச்சுத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ லட்சுமிகாந்தன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


