News April 11, 2025
புதுவை PRTC ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பி.ஆர்.டி.சி.யில் 276 ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். நேற்று போக்குவரத்துதுறை ஆணையர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ நேரு ஏற்பாடு செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தர கோரிக்கைகயை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
Similar News
News December 19, 2025
புதுச்சேரி: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

புதுச்சேரி, துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்தியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதாரம் நடத்தும், அனைத்து சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை 20ஆம் தேதி நடக்கிறது. இந்த முகாம் புதுச்சேரி நடேசன் நகர், 3வது குறுக்கு தெரு, எண்- 5 முதல் தளத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
News December 19, 2025
புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு அழைப்பு

புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் தின விழா, வரும் 23ம் தேதி புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது. விழாவில், கவர்னர், முதல்வர், சபாநாயகர், துறை அமைச்சர், காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ பங்கேற்க உள்ளனர். புதுச்சேரி பிராந்தியத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தனர்.
News December 19, 2025
புதுவை: அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்

புதுச்சேரியில் முதல்வர் உத்தரவின் பேரில் 15,783 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


