News April 11, 2025
புதுவை PRTC ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பி.ஆர்.டி.சி.யில் 276 ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். நேற்று போக்குவரத்துதுறை ஆணையர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ நேரு ஏற்பாடு செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தர கோரிக்கைகயை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: மழையால் இடிந்து விழுந்த பள்ளி சுவர்

புதுச்சேரி அரியாங்குப்பம் புறவழிச்சாலை, சிக்னல் அருகில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. டிட்வா புயலால் பெய்த மழையால், நேற்று சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின், 10 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது, சுவர் பக்க த்தில் இருந்த, ஜூஸ், டிபன், சிக்கன் கடைகள் உட்பட 5 சாலையோர கடைகள் மீது சுவர் விழுந்ததில் கடைகள் முற்றிலும் சேதமடைந்தன.
News December 2, 2025
புதுச்சேரி: ஆசிரியர் பணிக்கான முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச பட்டியல், வயது உச்சவரம்பு, கல்வித்தகுதி, பதவி உயர்வு உள்பட நியமன விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் https://schooledn.py.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
News December 2, 2025
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை, பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 360 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி இன்னும் 2 மாதத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு, தேதி விவரத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்தார்.


