News April 13, 2024

புதுவை: வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது. இந்த தேதியில் வெளிப்புற சிகிச்சை பெற வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 21, 2025

காரைக்கால் வார சந்தையில் ஆட்சியர் ஆய்வு

image

காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான திருநள்ளாறு சாலையில் உள்ள சந்தை திடலில் தொடர் கனமழை காரணமாக, சந்தை பகுதி மிகவும் சேரும் சகதியும் காட்சி அளித்தது. காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் சந்தையானது செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் நடைபெறும் வார சந்தையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.‌

News December 21, 2025

புதுச்சேரி: புதிய டோல் பிளாசா துவக்கம்

image

விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே மதகடிப்பட்டு அருகில் ஒரு டோல் பிளாசா இருக்கின்றது. இந்த பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் பாகூர் அருகில் சேலியமேடு வருவாய் கிராமம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு புதிய டோல் பிளாசா கட்டண வசூல் துவங்க இருப்பதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News December 21, 2025

புதுச்சேரி: போலியோ முகாமை தொடக்கி வைத்த முதல்வர்

image

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கப்பட்டது. இந்த முகாமை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். குழந்தைகள் அனைவரும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, 5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!