News April 13, 2024
புதுவை: வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது. இந்த தேதியில் வெளிப்புற சிகிச்சை பெற வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
புதுவை கலெக்டர் கொடுத்த முக்கிய உத்தரவு

புதுவை கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். மேலும் சீனியர் எஸ்.பி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தனியார் கொரியர் நிறுவனங்கள் மூலம் பார்சல் எடுத்து வரும் பொழுது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வருகின்றனவா என்பது குறித்து போலீசார் கண்காணிக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.
News January 10, 2026
புதுச்சேரி: டிரைவர் தீக்குளித்து தற்கொலை

முத்திரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்வகுமார். இவர், பிரியதர்ஷினி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோரை மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், மிகுந்த மன வருத்தத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய சூழலில், செல்வகுமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
News January 10, 2026
காரைக்கால்: மருத்துவரின் வருகை தேதி மாற்றம்

காரைக்கால் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து (16.1.2026) அன்று காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தர இருந்த சிறப்பு மருத்துவர்களின் வருகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் (23.01.2026) வெள்ளிக்கிழமை அன்றைக்கு மாற்றப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


