News April 13, 2024

புதுவை: வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது. இந்த தேதியில் வெளிப்புற சிகிச்சை பெற வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 19, 2025

புதுச்சேரி: முதியோர்களை காப்பது சமூகப் பொறுப்புணர்வு

image

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முதியோா்களைக் காப்பதும் அன்பு செலுத்துவதும், விதவைகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதும் மனித நேயமிக்கது. சமூகப் பொறுப்புணா்வு மிக்கது. புதுவையில் முதியோா்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.45 கோடி செலவாகிறது.

News September 19, 2025

புதுச்சேரியில் ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

image

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கும் துவக்க விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நேற்று நடந்தது. விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி அரசு துறைகளில் காலி பணியிடங்கள் தகுதி அடிப்படையில் 4,500 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் புதிதாக ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

News September 19, 2025

புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.29 கோடி கையாடல்

image

புதுச்சேரி அரசின், 2023 – 24ம் ஆண்டு பட்ஜெட் மீதான மத்திய தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின், மக்களின் பார்வைக்காக, கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி புதுச்சேரியில், அரசு துறைகளில் 29 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், மின்துறையில் மட்டும், 27 கோடி ரூபாய் கையாடல் நடந்துள்ளது.

error: Content is protected !!