News April 16, 2025
புதுவை: வங்கி அதிகாரி என கூறி 72 ஆயிரம் மோசடி

முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது வங்கி கணக்கிற்கு பான் கார்டு விவரங்களை புதுப்பிக்குமாறு ஒரு லிங்க்கை அனுப்பி உள்ளார். அந்த லிங்க்கை வழியாக கார்த்திக் உள்ளே சென்றவுடன் அவரது வங்கி கணக்கிலிருந்து 72,800 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
Similar News
News November 27, 2025
புதுவை: போலி மாத்திரை தயாரித்த தொழிற்சாலை

புதுவை, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் போலி மருந்து தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, CBCID இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள மருந்துகள் போலியானவை என தெரியவந்ததால் போலீஸ் டிஐஜி எஸ்பி-க்கள் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது.
News November 27, 2025
புதுவை: போலி மாத்திரை தயாரித்த தொழிற்சாலை

புதுவை, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் போலி மருந்து தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, CBCID இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள மருந்துகள் போலியானவை என தெரியவந்ததால் போலீஸ் டிஐஜி எஸ்பி-க்கள் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது.
News November 27, 2025
புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

புதுவை தொண்டமாநத்தம் வில்லியனூர் மின்பாதையில் இன்று(நவ.27) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உளவாய்க்கால், சேந்தநத்தம்பேட்டை, வள்ளுவன்பேட்டை மற்றும் உயர் மின்அழுத்த தொழிற்சாலைகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுமென புதுவை மின்துறை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.


