News April 16, 2025
புதுவை: வங்கி அதிகாரி என கூறி 72 ஆயிரம் மோசடி

முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது வங்கி கணக்கிற்கு பான் கார்டு விவரங்களை புதுப்பிக்குமாறு ஒரு லிங்க்கை அனுப்பி உள்ளார். அந்த லிங்க்கை வழியாக கார்த்திக் உள்ளே சென்றவுடன் அவரது வங்கி கணக்கிலிருந்து 72,800 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
Similar News
News November 21, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சமீப காலமாக SIR படிவம் நிரப்பும் வேலை இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சூழலை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள், பொதுமக்களை தொடர்பு கொண்டு படிவம் நிரப்புவது சம்மந்தமாக பேசுகிறோம் அதற்கு உங்கள் தொலைபேசியில் OTP Number வந்திருக்கும் அதை கூறுங்கள் என்று கேட்டால் அதனை நம்பி OTP எண்ணை பகிர வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 21, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்.. ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025 @ 11.30 PM
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 26
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
புதுச்சேரி: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம், 2013ன் பிரிவு 4ன் படி பத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனமும், ஒரு உள் புகார் குழுவை அமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


