News April 16, 2025

புதுவை: மே.30 கடைசி நாள்

image

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றி தழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

புதுச்சேரி: காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம்

image

ஏனாம் பிராந்திய காவல் ஆய்வாளா் ஆடலரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒரு வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, 4 போலீசாருடன் வேனில் ஏனாம் சென்ற போது, அவர்கள் கள் குடிப்பது போலவும், குத்தாட்ட பாடல்களைப் போட்டு கொண்டு நடனமாடி மகிழ்ந்தது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்து டிஜிபி நேற்று உத்தரவிட்டார்.

News November 15, 2025

புதுவை: இலவச நண்டு வளர்ப்பு பயிற்சி

image

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 21-ம் தேதி அன்று காரைக்காலில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் கூண்டு முறையில் கல் நண்டு வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கூண்டு முறையில் கல் நண்டு வளர்ப்பு முறை நீர் மேலாண்மை பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க 8778608187 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 15, 2025

புதுவை: வாலிபர் கொலையில் 9 பேர் கைது

image

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகன் மகன் சந்தோஷ், ரெயின்போ நகர் பகுதியில் சாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், டிவி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் நடந்த தகராறில் சந்தோஷ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரிய கடை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நேற்று 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!