News October 25, 2024

புதுவை: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

image

புதுச்சேரி அரசு செயலர் பங்கஜ்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பணி துறையில், இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும், 27ஆம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடக்கிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து செய்வதோடு, பிற தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

Similar News

News December 7, 2025

புதுச்சேரி: ‘முப்பரிமாணங்கள்’ ஓவியக் கண்காட்சி தொடக்கம்

image

புதுச்சேரி செட்டி வீதியில், தனியார் உணவகத்தில் “முப்பரிமாணங்கள்” ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இந்நிகழ்வினை தொழிலதிபர் ராமச்சந்திரன், அடி சல்பே நிர்வாகி சுகன்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மேலும் கலைமாமணிகள் ஓவியர் சுகுமாரன், கந்தப்பன் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வு டிச.6-27 வரை இலவசமாக பொதுமக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் இருக்கும் என்று தனியார் உணவாக சார்பில் தெரிவித்தனர்.

News December 7, 2025

புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி அறிவிப்பு

image

புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கத் தலைவர் பேராசிரியா் ராமலிங்கம், புத்தக கண்காட்சி தேதிகளை அறிவித்தார். மேலும் “29-ஆவது தேசிய புத்தக கண்காட்சி டிச.19-28 ஆகிய தேதிகளில், தனியார் மண்டபத்தில் நடைபெறும். இதில் சுமாா் 60,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில், புத்தகங்களின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் கண்காட்சியில் இடம் பெறும் நூல்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

News December 6, 2025

புதுச்சேரி: தவெக பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு அனுமதி

image

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி நடைபெறும் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!