News October 25, 2024
புதுவை: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

புதுச்சேரி அரசு செயலர் பங்கஜ்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பணி துறையில், இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும், 27ஆம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடக்கிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து செய்வதோடு, பிற தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Similar News
News October 15, 2025
புதுவையில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

புதுவை, அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவபாண்டியனுக்கு, சத்யா என்ற மனைவி உள்ளார். சிவபாண்டியன் தினமும் மது குடித்து வந்தார். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட அவர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மன உளைச்சலில் இருந்த சிவபாண்டியன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News October 15, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 15, 2025
புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை அமைச்ச கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அம் லுக்கு வந்துள்ளது. இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1-ம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.