News October 25, 2024

புதுவை: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

image

புதுச்சேரி அரசு செயலர் பங்கஜ்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பணி துறையில், இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும், 27ஆம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடக்கிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து செய்வதோடு, பிற தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

Similar News

News November 8, 2025

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

image

புதுவை, காலாப்பட்டு போலீசார் தகவலின் பேரில் சில கடைகளில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது புதுவை பல்கலைகழகம் பகுதியில் 4 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற காலாப்பட்டு பெர்னாண்டஸ் (49), கனகசெட்டிகுளம் சக்திவேல் (47), விக்னேஸ்வரன் (30), பாபு (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கடைகளில் ரூ.9,655 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News November 7, 2025

புதுச்சேரி: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

News November 7, 2025

புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.8) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இன்று கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!