News March 29, 2024
புதுவை: முதன்முறை வாக்காளர்கள் 28,921 பேர்

புதுவை தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, புதுவைக்கு ஏற்கனவே 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். மேலும் 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஏப்ரல் முதல் வாரத்தில் வருகை தர உள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ரூ.3.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.3.51 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதல்முறை வாக்காளர்கள் 28,921 பேர் என்று கூறினார்.
Similar News
News November 9, 2025
புதுச்சேரி: முதல்வருக்கு புத்தகம் அளிப்பு!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா வீட்டுத்தொடர்பு இயக்கம் சார்பில், அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ். தென்பாரத தர்மஜாக்ரண் ப்ரமுக் இராம இராஜசேகர் அவர்கள், புதுச்சேரி மாவட்ட அமைப்பாளர் முகுந்தன், மாவட்ட சம்பர்க்கப்ரமுக் ஸ்டார் சுரேஷ் சந்தித்து, ஆர்.எஸ்.எஸ் பிரசுரம் மற்றும் புத்தகம் அளித்தார். உடன் உள்துறை அமைச்சர் இருந்தனர்.
News November 9, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், BPO மற்றும் கால் சென்டர் நடத்துபவர்கள் மத்திய, மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி பெறுவது கட்டாயம். மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே அவர்கள் தங்கள் சேவையைத் தொடர வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாதவர்கள் உடனடியாக அனுமதி பெற வேண்டும் மீறும் பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
News November 9, 2025
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி அழைப்பு

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தியில், தெரு நாய்களுக்கு உணவளிக்க, பிரத்தியேகமான இடங்களை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தெரு நாய்களுக்கு உணவளிக்க ஏதுவான இடங்கள் இருப்பின், அவற்றின் விவரங்களை உழவர்கரை நகராட்சியின் 75981 71674 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில், இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


