News March 29, 2024

புதுவை: முதன்முறை வாக்காளர்கள் 28,921 பேர்

image

புதுவை தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, புதுவைக்கு ஏற்கனவே 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். மேலும் 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஏப்ரல் முதல் வாரத்தில் வருகை தர உள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ரூ.3.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.3.51 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதல்முறை வாக்காளர்கள் 28,921 பேர் என்று கூறினார்.

Similar News

News November 20, 2025

ஒப்பந்த அடிப்படையில் அரசு உதவி வக்கீல்கள் நியமனம்

image

புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள உதவி அரசு வக்கீல்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் பட்டு வருகின்றன. அதன்படி, புதுச்சேரி குற்றவியல் கோர்ட்டு உதவி அரசு வக்கீல்களாக இளங்கோவன், ஜெரால்ட் இமானுவேல், தேவேந்திரன், மகிளா கோர்ட்டு அரசு உதவி வக்கீலாக ஜெயமாரிமுத்து, காரைக்கால் குற்றவியல் கோர்ட்டு அரசு உதவி வக்கீலாக ஏசுராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேற்கண்ட தகவல் புதுவை அரசாணையில் வெளியிடப்பட்டது.

News November 20, 2025

புதுவை: இதற்கு டிச.10-ம் தேதியே கடைசி நாள்!

image

ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், “பொங்கல் வேட்டி, சேலை திட்டத்தில் பயன்பெற 18 வயது பூர்த்தி அடைந்த புதிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் குடும்பத்தினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்று, வரும் 10.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

News November 20, 2025

புதுகை: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

image

புதுகை மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!