News September 14, 2024

புதுவை மீனவர்களுக்கு கட்டுப்பாடு

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் கருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களின் வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே உச்சநீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 22, 2025

புதுச்சேரி: திடீரென பெண் உயிரிழப்பு

image

திருநள்ளாறு நளன்குளம் அருகே, நின்று கொண்டிருந்த 70 வயது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? டூரிஸ்ட்டாக வநதவரா என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 22, 2025

புதுச்சேரி: மீனவர்களின் குறைகளை கேட்ட மத்திய அமைச்சர்

image

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, பாஜக மாநில மீனவர் அணி தலைவர் மாரியப்பனுடன் புதுவை வம்பா கீரப்பாளையம் மீனவ கிராம மக்களை, நேற்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது புதுவை மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் உடன் இருந்தார்.

News December 22, 2025

புதுச்சேரி: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

image

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:

▶️மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
▶️பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
▶️அவசர ஊர்தி (Ambulance)-102, 108
▶️தீயணைப்பு-101
▶️காவல் கட்டுப்பாட்டு அறை-100
▶️குழந்தைகள் பாதுகாப்பு-1098
▶️பெண்கள் உதவி-1091
▶️சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

error: Content is protected !!