News April 10, 2025
புதுவை: தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றம்

புதுச்சேரியில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்எல்ஏக்கள் வேகமாக செலவிடும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்ய மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியாக, முன்பு ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. இதனை என். ஆர் . காங்கிரஸ்- பா. ஜ. க கூட்டணி ஆட்சியில் இரண்டு கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதனை 3 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
புதுவை: மருத்துவ படிப்பில் கூடுதலாக இடங்கள்

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்க 56 இடங்கள் உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி அதனை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிடம் புதுவை அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி இந்த ஆண்டு கூடுதலாக 16 இடங்களை நிரப்ப மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது. இதனால் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை இடங்கள் 72 ஆக உயர்ந்துள்ளது.
News November 1, 2025
புதுவை: விடுதலைநாள் விழா – தேசிய கொடி ஏற்றிய முதல்வர்

புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று (நவ.1) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி, காவல்துறை மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார். இவ்விழாவில் சபாநாயகர், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News November 1, 2025
புதுவை: வாய்க்காலில் விழுந்து விவசாயி பலி

புதுவை, பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்திக்கு நுரையீரலில் பிரச்சினை இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அவர் அங்குள்ள வாய்க்காலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


