News April 23, 2025
புதுவை: சிறுமி பாலியல் வன்கொடுமை-20 வருட சிறை

புதுச்சேரியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும், வீடு கொடுத்து உதவிய அவரது நண்பர் கதிர்வேல் (29) என்பவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்க புதுச்சேரி அரசுக்கு, பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
புதுச்சேரி: காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம்

ஏனாம் பிராந்திய காவல் ஆய்வாளா் ஆடலரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒரு வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, 4 போலீசாருடன் வேனில் ஏனாம் சென்ற போது, அவர்கள் கள் குடிப்பது போலவும், குத்தாட்ட பாடல்களைப் போட்டு கொண்டு நடனமாடி மகிழ்ந்தது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்து டிஜிபி நேற்று உத்தரவிட்டார்.
News November 15, 2025
புதுவை: இலவச நண்டு வளர்ப்பு பயிற்சி

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 21-ம் தேதி அன்று காரைக்காலில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் கூண்டு முறையில் கல் நண்டு வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கூண்டு முறையில் கல் நண்டு வளர்ப்பு முறை நீர் மேலாண்மை பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க 8778608187 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 15, 2025
புதுவை: வாலிபர் கொலையில் 9 பேர் கைது

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகன் மகன் சந்தோஷ், ரெயின்போ நகர் பகுதியில் சாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், டிவி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் நடந்த தகராறில் சந்தோஷ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரிய கடை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நேற்று 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


