News April 23, 2025
புதுவை: சிறுமி பாலியல் வன்கொடுமை-20 வருட சிறை

புதுச்சேரியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும், வீடு கொடுத்து உதவிய அவரது நண்பர் கதிர்வேல் (29) என்பவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்க புதுச்சேரி அரசுக்கு, பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

புதுவை தொண்டமாநத்தம் வில்லியனூர் மின்பாதையில் இன்று(நவ.27) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உளவாய்க்கால், சேந்தநத்தம்பேட்டை, வள்ளுவன்பேட்டை மற்றும் உயர் மின்அழுத்த தொழிற்சாலைகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுமென புதுவை மின்துறை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
News November 27, 2025
புதுவை: தெலுங்கானா தொழிலாளி உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

தெலுங்கானாவை சேர்ந்த வெங்கடய்யா என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த குன்ன வெங்கடேஷிடம் புதுவையில் ஒப்பந்த அடிப்படையில், வேலை செய்தார். வெங்கடய்யாவுக்கு, உடல்நிலை சரியில்லாததால், அவரை, தெலுங்கானாவுக்கு அனுப்ப குன்ன வெங்கடேஷ் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றபோது, வெங்கடய்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்தார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News November 27, 2025
புதுவை: பரிசுப் பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நாள்காட்டிகள் (காலண்டர்களை) உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நமது மக்கள் கழக தலைவருமான நேரு, இன்று காந்தி வீதி – வெள்ளாள வீதி இணைப்பு பகுதியில் உள்ள கங்கை விநாயகர் கோயிலில் இருந்து கிறிஸ்துமஸ், 2026-புத்தாண்டு, பொங்கல் மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள் கூறி காலண்டர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.


