News April 23, 2025
புதுவை: சிறுமி பாலியல் வன்கொடுமை-20 வருட சிறை

புதுச்சேரியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும், வீடு கொடுத்து உதவிய அவரது நண்பர் கதிர்வேல் (29) என்பவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்க புதுச்சேரி அரசுக்கு, பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
புதுச்சேரி வரும் ரயில்கள் ரத்து

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மண்டல அதிகாரி வினோத் குமாா் நேற்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி – புதுச்சேரி பயணிகள் ரயில் திருப்பதியில் அதிகாலை தினமும் 4 மணிக்குப் புறப்படுகிறது. டிச.15-ஆம் தேதி இந்த ரயில் திருப்பதி – விழுப்புரம் இடையே மட்டும் இயக்கப்படும். புதுச்சேரி – எழும்பூா் பயணிகள் ரயில், டிசம்பர் 15ல் புதுச்சேரி விழுப்புரத்துக்கு இடையில் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.
News December 9, 2025
புதுச்சேரி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
புதுவை: விஜய் பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்

புதுச்சேரியில், இன்று தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் பேசியத்தற்கு, அமைச்சர் நமச்சிவாயம் எதிர்வினை ஆற்றியுள்ளார், ரேசன் கடைகள் மத்திய அரசு Controlல் இருக்கிறதா?, இல்லை மாநில அரசு Controlல் இருக்கிறதா?, இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் ரேசன் கடைகள் மூலம் தான் விநியோகம் செய்யப்படுகிறது. அதுகூடத்தெரியாம பேசிட்டு இருக்கார் விஜய் என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியுள்ளார்.


