News April 23, 2025

புதுவை: சிறுமி பாலியல் வன்கொடுமை-20 வருட சிறை

image

புதுச்சேரியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும், வீடு கொடுத்து உதவிய அவரது நண்பர் கதிர்வேல் (29) என்பவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்க புதுச்சேரி அரசுக்கு, பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

புதுச்சேரி: அரசு பணியாளர் தேர்வு அறிவிப்பு!

image

புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அரசு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி. எஸ்.சி.) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் மற்றும் அமலாக்க அதிகாரி, கணக்கு அதிகாரி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்பு சேர்ப்பு தேர்வு நாளை மறுநாள் 30ம் தேதி நடக்கிறது.

News November 28, 2025

புதுவை: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்தியால் வெட்டு

image

புதுவை வில்லியனுார் ராமநாதபுரம், புது தெரு விஜயசங்கர், நேற்று முன்தினம் அங்குள்ள பாலம் வழியாக பைக்கில் சென்றார். அதே பகுதி செந்தில் என்பவர் மாடுகளை சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது மாடு இடித்து விஜயசங்கர் கீழே விழுந்தார். தட்டிக்கேட்ட விஜயசங்கரை செந்தில், கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 28, 2025

காரைக்கால்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

image

‘டித்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே காரைக்காலில் உள்ள பொதுமக்கள் எச்சரிகையுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக புகார்களுக்கு இலவச எண்கள் 1070, 1077 ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!