News March 18, 2024
புதுவை: காரைக்காலில் துப்பாக்கிகள் வைத்திருக்க தடை

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரைக்காலில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால், துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Similar News
News December 20, 2025
புதுவை: கூலி தொழிலாளி ஏரியில் மூழ்கி இறப்பு

பி.எஸ்.பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அய்யனார்(59). சம்பவத்தன்று இவர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது, ஏரியில் மூழ்கியுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சையில் இருந்த அய்யனார் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 20, 2025
புதுவை: போலீஸ் உடற்தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரி, காவல்துறையில் காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப அறிவிப்பு ஆணை கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9,932 விண்ணப்பங்கள் ஏற்றுக்கப்பட்டன. இந்நிலையில் இதற்கான உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது என காவல்துறை சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
புதுவை: காசு வைத்து சூதாட்டம் – 9 பேர் கைது

உப்பளம் எக்ஸ்போ புதிய துறைமுக மைதானத்தில், சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சூது விளையாடியவர்களை பிடித்து விசாரித்ததில், முதலியார்பேட்டை சேர்ந்த ராஜி, வாணரப்பேட்டை சேர்ந்த அருள், பிரகாஷ், சத்தியமூர்த்தி, அற்புதராஜ், பாவாணர் நகர் தமிழ்மணி, ஆட்டுப்பட்டி முருகன், வம்பாகீரப்பாளையம் தர்மேந்திரன் சுரேஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


