News December 31, 2024

புதுவை: ஒயிட் டவுன்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை

image

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு குறித்த விளக்ககூட்டம், ஆசிரமம் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.ஐ.ஜி., அஜித்குமார் சிங் தலைமையில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நாரா சைதன்யா, பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.இதில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.

Similar News

News August 13, 2025

புதுச்சேரி காவல்துறையில் வேலை-APPLY NOW

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று (ஆக.13) காலை 10 மணி முதல் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள் https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க..

News August 13, 2025

புதுவையில் இளம்பெண் தற்கொலை

image

கிருமாம்பாக்கம், பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபராதி (24). இவருக்கும், நரம்பை கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றுவதால் சொந்த ஊருக்கு வர தாமதம் ஏற்பட்டு, திருமணம் தடைப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உமாபாரதி தற்கொலை செய்துகொண்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 13, 2025

புதுவையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி நிகழ்ச்சி

image

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி – மாநில அளவிலான நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் போது அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

error: Content is protected !!