News August 11, 2024
புதுவை: எஸ்எம்எஸ் அனுப்பி ரூ.2 லட்சம் மோசடி

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த வந்தனா என்பவரின் வாட்ஸ் அப்பில் வங்கியில் இருந்து போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் புதிதாக செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வந்தனா அந்த செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை பதிவு செய்த சிறிது நேரத்தில் ரூ.2 லட்சத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இது குறித்து அவர் கோரிமேடு சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
Similar News
News December 15, 2025
புதுச்சேரி: ரகளையில் ஈடுபட்டவர் கைது

புதுச்சேரி, ஒதியஞ்சாலை நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாசாலை மதுபான கடை அருகே, நபர் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக, ஒதியஞ்சாலை போலீசாருக்கு கிடைத்தது. தகவல் சம்பவ இடத்துக்கு போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்ததில், அவர் முதலியார்பேட்டையை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.
News December 15, 2025
புதுச்சேரி: குண்டர் சட்டத்தில் கைது செய்ய தீர்மானம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம், நேற்று கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தலைமையில், தட்டாஞ்சாவடியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் புதுவையில் செயல்பட்டு வந்த போலி மருத்துவ தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களின், உயிரோடு விளையாடிய மருந்து நிறுவன உரிமையாளர்கள் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
News December 15, 2025
புதுச்சேரி: ரூ.52 லட்சம் இழந்த பெண்

புதுச்சேரி வைத்திகுப்பத்தை சேர்ந்த பெண்ணை, டில்லி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என கூறி மர்ம நபர் ஏமாற்றி உள்ளார். அவர் அந்த பெண்ணின் பெயரில் சட்டவிரோத பணமோசடி நடந்ததாக கூறி, பின்னர் டில்லி போலீஸ் அதிகாரி என அறிமுகமான மற்றொரு நபர் வழக்கில் இருந்து விடுவிக்க பணம் கேட்டு ஏமாற்றியுள்ளார். அப்பெண் மொத்தம் ரூ.52 லட்சம் அனுப்பி ஏமாந்துள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


