News April 18, 2025
புதுவை இ.சி.ஆரில் பைக் மோதி பெண் பலி

புதுவை பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் நேற்று காலை அவரது வீட்டிற்கு அருகேயுள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது இ.சி.ஆர் சாலையை சுந்தரி கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியதால் படுகாயமடைந்த சுந்தரி உயிரிழந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
காரைக்கால்: கிளினிக்கில் பணத்தை திருடியவர் கைது

காரைக்கால் ரயில் நிலையம் அருகே, டாக்டர் வனிதா என்பவர் தனியார் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், கிளினிக் கதவை உடைக்கப்பட்டு, ரூ.3 லட்சம் பணம் மற்றும் மொபைல் போன் திருடப்பட்டிருந்தது. புகார் படி போலீசார் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 8, 2025
புதுவை: கார் மீது லாரி மோதி விபத்து

திண்டிவனத்தில் இருந்து, கடலூர் நோக்கி கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. புதுவை இந்திராகாந்தி சிக்னல் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News December 8, 2025
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதலவர்

தேக்வாண்டோ மாணவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார். புதுச்சேரியில் தேக்வாண்டோ தற்காப்பு கலை பயிலும் மாணவர்கள், சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். இந்த கலையில், மாநில அளவில் பிளாக் பெல்ட் எனும் நிலையை அடைந்த, நுாறு மாணவர்களுக்கு சான்றிதழை, முதல்வர் வழங்கினார்.


