News August 18, 2024
புதுவை ஆளுநர் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 18, 2025
புதுவை: படகு இயக்கிய தனியார் நிறுவனம் மீது வழக்கு

பழைய துறைமுகம் பகுதியில் படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் விசாரித்ததில், படகு மூலம், 62 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. வானிலை எச்சரிக்கை அறிவிப்பை மீறி சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற, தனியார் வாட்டர் அட்வென்ச்சர் நிறுவனத்தின் மீது, போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.
News November 18, 2025
புதுவை: படகு இயக்கிய தனியார் நிறுவனம் மீது வழக்கு

பழைய துறைமுகம் பகுதியில் படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் விசாரித்ததில், படகு மூலம், 62 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. வானிலை எச்சரிக்கை அறிவிப்பை மீறி சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற, தனியார் வாட்டர் அட்வென்ச்சர் நிறுவனத்தின் மீது, போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.
News November 18, 2025
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்து

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.


