News August 18, 2024
புதுவை ஆளுநர் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 24, 2025
புதுச்சேரி போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ் ஆப் மூலம், பகுதி நேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல் கூறியதை நம்பி, புதுச்சேரியை சேர்ந்த 8 பேர் ரூ.1லட்சத்து 92ஆயிரத்து 825 இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.
News November 24, 2025
புதுச்சேரி மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழக கடலோரப் பகுதிகளான, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் (25-11-25) அன்று முதல் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள மீன்பிடி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (24-11-25) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
புதுச்சேரி: பள்ளி மாணவி திடீர் உயிரிழப்பு!

திருக்கனூர் சுதாகர் தொழிலாளி அவரது மகள் நிவிதா, அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை நிவிதா தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறியதால் குணசுந்தரி, நிவிதாவை திருக்கனூர் அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு வந்த நிவிதா, பின்னர் மாலை திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.


