News August 18, 2024
புதுவை ஆளுநர் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 21, 2025
காரைக்கால் வார சந்தையில் ஆட்சியர் ஆய்வு

காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான திருநள்ளாறு சாலையில் உள்ள சந்தை திடலில் தொடர் கனமழை காரணமாக, சந்தை பகுதி மிகவும் சேரும் சகதியும் காட்சி அளித்தது. காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் சந்தையானது செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் நடைபெறும் வார சந்தையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
News December 21, 2025
புதுச்சேரி: புதிய டோல் பிளாசா துவக்கம்

விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே மதகடிப்பட்டு அருகில் ஒரு டோல் பிளாசா இருக்கின்றது. இந்த பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் பாகூர் அருகில் சேலியமேடு வருவாய் கிராமம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு புதிய டோல் பிளாசா கட்டண வசூல் துவங்க இருப்பதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
News December 21, 2025
புதுச்சேரி: போலியோ முகாமை தொடக்கி வைத்த முதல்வர்

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கப்பட்டது. இந்த முகாமை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். குழந்தைகள் அனைவரும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, 5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.


