News March 28, 2024
புதுவையில் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல்

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சாலையில் பறக்கும்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையை மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.7 லட்சம் பணம் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
Similar News
News December 4, 2025
புதுச்சேரி: அமைச்சர் பெயரில் போலி அறிவிப்பு!

புதுச்சேரி உள்துறை பொறுப்பு வகித்து வரும் அமைச்சர் நமச்சிவாயமே கல்வித்துறைக்கும் பொறுப்பு வகித்து வருகின்றார். பள்ளிகளுக்கு மழை விடுமுறையை நேற்று அளித்திருந்தார். அந்த அறிவிப்பையே பயன்படுத்தி இன்று (04.12.25) விடுமுறை என்று போலியாக தயாரித்து சமூக வலைதளத்தில் சில சமூக விரோதிகள் வெளியிட்டனர். இது குறித்து அமைச்சர் அலுவலகம் சார்பில் காவல்துறையில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
புதுச்சேரி: MLA-வை தகுதி நீக்கம் செய்ய கோரி போராட்டம்

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ லட்சுமிகாந்தனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இயக்க நிறுவனர் ரகுபதி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு லட்சுமிகாந்தனை தகுதி நீக்கம் செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர்.
News December 3, 2025
காரைக்காலில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

காரைக்கால் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி இன்று (டிச.03) கோவில்பத்து அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் பூஜா கண்காட்சியை துவக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். மேலும் அறிவியல் படைப்புகளில் 300க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.


