News March 28, 2024

புதுவையில் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல்

image

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சாலையில் பறக்கும்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையை மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.7 லட்சம் பணம் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

Similar News

News November 17, 2025

புதுச்சேரி: இன்று விடுமுறை அறிவிப்பு

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (17/11/25) புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

News November 17, 2025

கோரிமேட்டில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

image

புதுச்சேரி, கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையேயான (வட்டம்-2) தடகள போட்டிகள் நேற்று நடந்து. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் துணை இயக்குனர் வைத்திய நாதன், உடற்கல்வி விரிவுரையாளர் ரவிக்குமார், உடற் கல்வி ஆசிரியர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

News November 17, 2025

ஏம்பலம்: ஜசம்மக்கள் மன்றத்தில் இணைந்த பாஜக துணை தலைவர்

image

புதுச்சேரி மாநிலம், ஏம்பலம் தொகுதியின், பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரான ஜெயதீபன், இன்று சமூக ஆர்வலர் சார்லஸ் மார்டின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, தனது ஆதரவாளர்களுடன் JCM மக்கள் மன்றத்தில் இணைத்துக் கொண்டார். இதில் சமூக ஆர்வலர் சார்லஸ் மார்டின், JCM மக்கள் மன்றத்திற்கு நற்பெயரை பெற்று தர வேண்டும் என்று ஜெயதீபனுக்கு வாழ்த்துகளை கூறினார்.

error: Content is protected !!