News January 9, 2025
புதுவையில் ரூ.40 லட்சம் மோசடி

புதுச்சேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன். மருத்துவ கல்லுாரியில் சீட்டு தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார். அதில் விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார். பேசிய நபர் தனது பெயர் வெங்கடேசன் எனவும் மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறினார். அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு 40 லட்சம் முன்பணம் அனுப்பி ஏமாந்துள்ளார். நேற்று சைபர் கிரைம் போலீசில் இமெயில் மூலம் புகாரளித்தார்.
Similar News
News December 8, 2025
காரைக்கால்: கிளினிக்கில் பணத்தை திருடியவர் கைது

காரைக்கால் ரயில் நிலையம் அருகே, டாக்டர் வனிதா என்பவர் தனியார் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், கிளினிக் கதவை உடைக்கப்பட்டு, ரூ.3 லட்சம் பணம் மற்றும் மொபைல் போன் திருடப்பட்டிருந்தது. புகார் படி போலீசார் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 8, 2025
புதுவை: கார் மீது லாரி மோதி விபத்து

திண்டிவனத்தில் இருந்து, கடலூர் நோக்கி கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. புதுவை இந்திராகாந்தி சிக்னல் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News December 8, 2025
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதலவர்

தேக்வாண்டோ மாணவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார். புதுச்சேரியில் தேக்வாண்டோ தற்காப்பு கலை பயிலும் மாணவர்கள், சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். இந்த கலையில், மாநில அளவில் பிளாக் பெல்ட் எனும் நிலையை அடைந்த, நுாறு மாணவர்களுக்கு சான்றிதழை, முதல்வர் வழங்கினார்.


