News March 26, 2025
புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடு – அமைச்சர் அறிவிப்பு

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் இந்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விளக்குகளும் LED விளக்குகளாக மாற்றப்படும். மின்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.
Similar News
News February 23, 2026
புதுச்சேரி: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 23, 2026
புதுச்சேரி: 16 ஆண்டுகளுக்குப் பிறகு (SI) தேர்வு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நேரடி நியமனத் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 4 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்வு என்பதால், பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
News February 23, 2026
புதுவையில் இளம்பெண் மாயம் – போலீசார் விசாரணை

புதுவை கரிக்கலாம்பாக்கம் கோர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகள் ராகவி (24), வில்லியனுாரில் உள்ள துணிக் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக் கம்போல் தணிகாசலம் தனது மகளை வில்லியனுாரில் வேலை செய்யும் துணிக்கடை பகுதியில் இறக்கிவிட்டு சென்றார். வேலைக்கு சென்ற ராகவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.


