News March 26, 2025
புதுவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் இன்று புதுச்சேரி வேலைவாய்ப்பகம் வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் & புதுவையைச் சார்ந்த 10 நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேல் பணியிடங்களை நிரப்ப உள்ளன. SSLC, HSC, ITI, DIPLOMA, ANY Degree என அனைவரும் பங்கு பெறலாம். நண்பர்கள் பயன் பெற SHARE செய்யவும்..
Similar News
News January 8, 2026
புதுவை: கால்நடை உரிமையாளர் மீது வழக்கு

நிரவி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீரன்கோவில் தெரு அருகே ரோந்து சென்றார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக பைபாஸ் சாலை சந்திப்பில்
மாடு ஒன்று சுற்றித்திரிந்தது. அதுபற்றி விசாரித்ததில், மேலஓடுதுறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவரின் மாடு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 8, 2026
புதுவை: கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது

கோரிமேடு உதவி ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக அந்த வழியாக வந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சாரம் முத்துரங்கசெட்டி நகரைச் சேர்ந்த புவேனேஷ் (24), முதலியார்பேட்டையைச் சேர்ந்த பாலா (23) என்பதும்; அவர்களிடம் கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
News January 8, 2026
புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை என அறிவிக்கப்பது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


