News August 3, 2024

புதுவையில் புதிய ஆளுநர் 7-ஆம் தேதி பதவியேற்பு

image

புதுச்சேரி மாநிலத்தில் புதிய துணை நிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கைலாசநாதன் அவர்களை நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் புதிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வரும் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரியில் உள்ள ராஜ் நிவாசில் பதவி ஏற்றுக்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Similar News

News December 12, 2025

புதுவை: மானிய விலையில் வான்கோழிகள்

image

கால்நடைத்துறை இயக்குநர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறையின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைகளில் வான்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், 6 வார வான்கோழிகள் 50 சதவீத மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. கால்நடை மருந்துவமனையை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 12, 2025

காரைக்காலில்: காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

image

காரைக்காலில் அனைத்து பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் கலந்தாய்வு கூட்டம், நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் கடைபிடிக்கவேண்டிய சாலை விதிகளை பற்றியும், பயணிகளின் பாதுகாப்பு பற்றியும், விபத்து நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பற்றி போலீசார் விரிவாக எடுத்துரைத்தனர்.

News December 12, 2025

புதுவை: மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் சோதனை

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருந்தகத்தில் 6 பேர் கொண்ட புதுச்சேரி மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போலி மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் பொதுமக்களுக்கு அதிக விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

error: Content is protected !!