News December 6, 2024
புதுவையில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும்

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கன மழையால், கடந்த 27, 28 மற்றும் 29ம் தேதி ஆகிய 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில், வரும் 7ஆம் தேதி (புதன்கிழமை பாடத்திட்டம்), 14ஆம் தேதி (வியாழக்கிழமை பாடத்திட்டம்) 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும். 21ஆம் தேதி சனிக்கிழமை செய்முறை தேர்வு 3 நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்தார்.
Similar News
News October 14, 2025
புதுவை: குடிநீர் வினியோகம் நிறுத்தம்

புதுவை பொதுப்பணித்துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் (அக் 15) புதன்கிழமை மதியம் 12 மணி முதல், 2 மணிவரை ராகவேந்திரா நகர் பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.
News October 13, 2025
புதுச்சேரி: விவசாயிகள் குறைதீர்பு கூட்டம் அறிவிப்பு!

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை சார்பில் (14.10.2025) காலை 11 மணியளவில் புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் முன்னிலையில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
News October 13, 2025
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<