News December 6, 2024
புதுவையில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும்

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கன மழையால், கடந்த 27, 28 மற்றும் 29ம் தேதி ஆகிய 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில், வரும் 7ஆம் தேதி (புதன்கிழமை பாடத்திட்டம்), 14ஆம் தேதி (வியாழக்கிழமை பாடத்திட்டம்) 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும். 21ஆம் தேதி சனிக்கிழமை செய்முறை தேர்வு 3 நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்தார்.
Similar News
News December 19, 2025
புதுவை: அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்

புதுச்சேரியில் முதல்வர் உத்தரவின் பேரில் 15,783 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News December 19, 2025
புதுவை: அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்

புதுச்சேரியில் முதல்வர் உத்தரவின் பேரில் 15,783 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News December 19, 2025
புதுச்சேரி: சட்டசபை முற்றுகை-மா.கம்யூ அறிவிப்பு

புதுவை போலி மருந்து விவகாரத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜன.5-ம் தேதி சட்டசபை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், “போலி மருந்து ஊழலை கண்டித்து வரும் ஜனவரி 5-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.” என உறுதிசெய்துள்ளார்.


