News October 24, 2024
புதுவையில் கடல் மாதா சிலையை உடைத்தவர் கைது

முத்தியால்பேட்டை, கேஆர் டபிள்யூஏ பேத்தாங் விளையாட்டு மைதானம் அருகில் கடல் மாதா சிலை உள்ளது. இந்நிலையில் அங்கு இருந்த சிலையை ராஜ் என்பவர் துண்டு துண்டாக உடைத்து அங்கிருந்து பெரியவர்களை அசிங்கமாக திட்டி மிரட்டுவதாக வினோத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் அவர்கள் ராஜி என்கிற புஷ்பராஜை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 9, 2025
டி ஐ ஜி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி காவல்துறை தலைவர் டிஜிபி அறிவுறுத்தல் படி, புதுச்சேரி உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது. அதன்படி, திருபுவனை காவல் நிலையத்தில் டிஐஜி சத்திய சுந்தரம் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
News August 9, 2025
முதல்வர் ரங்கசாமி பேட்டி

சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். இதில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ.4750 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் நடைபெறவுள்ள பணிகளுக்கு இரண்டு தவணையில் இந்த நிதி புதுச்சேரி அரசுக்கு கிடைக்கும். 50 ஆண்டுகள் கழித்து இந்த கடனை திருப்பி செலுத்தப்படும். மிக குறைந்த 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வட்டியில் இந்த நிதியுதவி கிடைக்கிறது என்றார்.
News August 9, 2025
புதுவை: ரூ.1,42,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <