News March 28, 2024

புதுவையில் எச்சரிக்கை

image

புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக் குறிப்பில்:- தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைத்து சிபிஐ அதிகாரி என்றும் உங்களுடைய பெயரில் வந்துள்ள பார்சலில் போதை பொருட்கள் உள்ளது என்றும் உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் வரை பணத்தை செலுத்த வேண்டும் என்று மிரட்டுவார்கள். இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளியின் செயல் எனவும் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News

News December 4, 2025

காரைக்கால்: நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

image

காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் வெளியிட்டுள்ள செய்தியில், பொது இடங்களில் பன்றிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 7 தினங்களுக்குள் தாங்கள் வளர்க்கும் பன்றிகளையும், தெருவில் சுற்றி திரியும் பன்றிகளையும் அப்புறப்படுத்தி விடவேண்டும். விதிகளை மீறுவோர் மீது காரைக்கால் நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

News December 4, 2025

புதுச்சேரி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

புதுவை: சிறையில் மொபைல் போன்கள்-4 கைதிகள் மீது வழக்கு

image

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, விசாரணை கைதிகள் அறை மற்றும் பொது கழிப்பிடம் அருகே பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 4 கைதிகள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

error: Content is protected !!