News March 28, 2024

புதுவையில் எச்சரிக்கை

image

புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக் குறிப்பில்:- தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைத்து சிபிஐ அதிகாரி என்றும் உங்களுடைய பெயரில் வந்துள்ள பார்சலில் போதை பொருட்கள் உள்ளது என்றும் உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் வரை பணத்தை செலுத்த வேண்டும் என்று மிரட்டுவார்கள். இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளியின் செயல் எனவும் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News

News November 28, 2025

புதுச்சேரி: குடிநீர் தடை அறிவிப்பு!

image

புதுச்சேரி, பொதுசுகாதார செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தியில், தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நாளை 29ம் தேதியும், குருமாம்பேட் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில், வரும் 1ம் தேதியும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை தனகோடி நகர், தர்மாபரி, லெனின் வீதி, சபரி நகர், பகுதிகளிலும், வரும் 1ம் தேதி குருமாம்பேட் பகுதியிலும் குடிநீர் தடைபடும் தெரிவித்தாரர்.

News November 28, 2025

புதுச்சேரி: சூறாவளிக்காற்று எச்சரிக்கை

image

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தியில், குமரிக்கடல் பகுதிகளில் இன்று 28ம் தேதி முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்தனர்.

News November 28, 2025

புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி, ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வினியோகம் செய்தனர். வாக்காளர்களின் படிவங்கள் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அட்டவணையின்படி வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் (டிச.4) ஆகும் என தெரிவித்தார்.

error: Content is protected !!