News October 25, 2024

புதுவையில் இன்று கடைசி நாள் 

image

புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாவது கட்ட சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து இன்று மாலைக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

Similar News

News November 1, 2025

புதுவை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News November 1, 2025

புதுவை: ரூ.2.44 கோடி மோசடி – ஒருவர் கைது

image

புதுச்சேரி, வெங்கட்டா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தொழிலதிபரான இவர், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவைகளை வாங்கி, கம்பெனிக்கு விற்பனை செய்து வருகிறார். இவரிடம் மக்காச்சோளம் வாங்கித் தருவதாக ரூ.2.44 கோடி மோசடி செய்த ப்ரோக்கர் செல்வம் என்பவ்ரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதற்கு காரணமாக இருந்த புதுவைச் சேர்ந்த தம்பதியை தேடி வருகின்றனர்.

News November 1, 2025

புதுவை: போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

புதுவை, சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். பேண்ட் மாஸ்டரான இவர், கடந்த 2023ம் ஆண்டு வீடு புகுந்து தனிமையில் இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புதுவை விரைவு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், நேற்று நீதிபதி சுமதி ரமேஷுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

error: Content is protected !!