News October 23, 2024
புதுமைப் பெண் திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம்

நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலமாக கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை பெறுவதில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை பெறுவதில் 2ஆவது இடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News November 23, 2025
நாமக்கல் அருகே விவசாயிக்கு கத்தி குத்து!

நாமக்கல், தும்மங்குறிச்சி மேலப்பட்டி மேல்முகம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயன் (80). விவசாயி. தோட்டத்தில் தனியாக இருந்த சுப்பராயனை மர்ம நபர்கள் இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், படுகாயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் நிலத்தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
News November 22, 2025
ராசிபுரம் அருகே பெண் விபரீத முடிவு

ராசிபுரம் அருகே சப்பையாபுரம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா்(24).இவரது மனைவி காயத்ரி(20). இவா்களுக்கு ஒருமாத ஆண் குழந்தை உள்ள நிலையில், ஆனந்தகுமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்துள்ளாா். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 19-ஆம் தேதி விஷமருந்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 22, 2025
நாமக்கல்: டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பீதி!

பரமத்திவேலூர் உட்கோட்டப் பகுதிகளில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் தெரிவித்தனர். கரூர்–அரவக்குறிச்சி பகுதிகளில் நால்வருக்கும் மேற்பட்டவர் முகம் மறைத்து, ஆயுதங்களுடன் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களையடுத்து, சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர கேட்டுக் கொண்டுள்ளனர்.


