News December 31, 2024
புதுமைப்பெண் திட்டத்தில் 9,340 மாணவிகளுக்கு நிதி

தமிழ்நாடு முழுவதும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தொடங்கி வைத்தார். மேலும், புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து 62 கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயிலும் 9,340 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
Similar News
News August 12, 2025
கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 11.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
News August 11, 2025
கிருஷ்ணகிரி காவல்துறை முக்கிய அறிவிப்பு

இணையதளத்தில் கவர்ச்சிகரமான பொருட்களின் விளம்பரங்களை நம்பி கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளமா? என உறுதி செய்த பின் பொருட்களை வாங்கவும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பண மோசடி புகார்களுக்கு உடனே 1930 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News August 11, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் தலைமையில் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.08.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் கோபு, தனித்துணை ஆட்சியர் தனஞ்செயன் உடனிருந்தனர். மக்களின் பல்வேறு குறைகள் கேட்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டது.