News December 31, 2024

புதுமைப்பெண் திட்டத்தில் 9,340 மாணவிகளுக்கு நிதி

image

தமிழ்நாடு முழுவதும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தொடங்கி வைத்தார். மேலும், புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து 62 கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயிலும் 9,340 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Similar News

News December 4, 2025

கிருஷ்ணகிரி: EB பிரச்சனையா..? உடனே CALL!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <>”TNEB Mobile App”<<>> பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 4, 2025

கிருஷ்ணகிரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
▶️பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
▶️இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
▶️ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் (ம) ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News December 4, 2025

கிருஷ்ணகிரி: மர்ம கொலை… இரண்டு பேர் சரண்!

image

ஓசூர் அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவரை நேற்று இரவு மர்மநபர் நபர்கள் சிலரால் கொலை செய்யப்பட்டது தெரியவந்து. அப்பகுதியில் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் நேற்று (டிச.3) மாலை 4 மணி அளவில் இரண்டு நபர்கள் தாங்கள் தான் ஹரிஷ் என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்தோம் என்று ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

error: Content is protected !!