News January 22, 2025
‘புதுமைப்பெண்’ திட்டத்தில் 8,087 பேர் பயன்!

தமிழ்நாடு அரசு, சமூக நலத்துறை மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2023- 24-ம் ஆண்டில் ‘புதுமைப்பெண்’ திட்டம் மூலம் 8 ஆயிரத்து 87 பேர் பயன்பெற்றுள்ளனர். திருமண நிதியுதவி திட்டத்தில் 1,204 பேர் பயனடைந்துள்ளதாக சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்!

சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில், பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு பிரச்சாரங்களும் வலைதளங்கள் வாயிலாகவும், அறிவிப்புகளை அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி தற்போது சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதால், விஞ்ஞான வளர்ச்சியின் துணைகொண்டு குற்றங்களை தடுக்க மூன்றாவது கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமரா அமைக்க வலியுறுத்தியுள்ளனர்.
News December 6, 2025
சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

சேலம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்காக பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டுள்ளது. ஓட்டுநர்கள் பயணிக்கும் போது மொபைல் போனை பயன்படுத்துவது விபத்துக்கான முக்கிய காரணமாக இருப்பதால், “You Can’t Do Both – Don’t Text While Drive” என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் பொதுமக்களை, உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தி, பயணத்தின் போது மொபைல் பயன்படுத்தாமல் கவனமாக ஓட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
News December 6, 2025
சேலம்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சேலம் மாநகர காவல் துறை சார்பில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது, அதிக வெளிச்சம் கொண்ட கண்களை பூச செய்யும் விளக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், இந்த விளக்குகளினால்எதிரே வரும் வாகனங்களில் பயணிப்போர் விபத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால், வாகன ஓட்டிகள் இதுபோன்ற விளக்குகளை தவிர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது.


