News August 9, 2024

புதுச்சேரி: 62 பவுன் தங்கம் கொள்ளை; 7 பேர் கைது

image

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி ஜூலை 22-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் கனகவள்ளியை தாக்கி 62 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 16, 2025

புதுச்சேரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

புதுவை: ஆன்லைனில் ரூ.6.5 கோடி மோசடி!

image

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆஷித்குமார், இவரது மொபைலுக்கு வந்த லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.6.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஆன்லைனில் ரூ.12.47 கோடி இருப்பதாக காட்டியது. ஆனால் அதனை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

News November 16, 2025

புதுச்சேரி: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொதுமக்களின் கருத்தை வடிவமைப்பதிலும், தகவலறிந்த சமூகத்தை உருவாக்குவதிலும், நிர்வாகத்தில் பொறுப்புணர்வை நிலைநிறுத்துவதிலும் ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மை, துல்லியம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றை நிலைநிறுத்துவது ஜனநாயகத்தின் அடித்தளம் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!