News August 9, 2024
புதுச்சேரி: 62 பவுன் தங்கம் கொள்ளை; 7 பேர் கைது

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி ஜூலை 22-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் கனகவள்ளியை தாக்கி 62 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 19, 2025
புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு அழைப்பு

புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் தின விழா, வரும் 23ம் தேதி புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது. விழாவில், கவர்னர், முதல்வர், சபாநாயகர், துறை அமைச்சர், காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ பங்கேற்க உள்ளனர். புதுச்சேரி பிராந்தியத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தனர்.
News December 19, 2025
புதுவை: அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்

புதுச்சேரியில் முதல்வர் உத்தரவின் பேரில் 15,783 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News December 19, 2025
புதுவை: அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்

புதுச்சேரியில் முதல்வர் உத்தரவின் பேரில் 15,783 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


