News August 9, 2024
புதுச்சேரி: 62 பவுன் தங்கம் கொள்ளை; 7 பேர் கைது

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி ஜூலை 22-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் கனகவள்ளியை தாக்கி 62 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 8, 2026
புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 8, 2026
புதுவை: விடுமுறையில் பள்ளிகளை இயக்க அறிவிப்பு

புதுச்சேரியில் டிட்வா புயல் காரணமாக கடந்த நவம்பர் 29-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய புதுவையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடத் திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
News January 8, 2026
புதுவை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

புதுவைப் பல்கலைக்கழகம், தமிழியற்புலத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியத்தில் சேர விரும்பும் மாணவர்கள் (NTA) நடத்தும் CUET-PG 2026 தேர்விற்கு வருகிற 14/01/2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் வருகிற கல்வியாண்டில் (2026-2027) இளங்கலை மற்றும் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு (66%) குறைக்கப்படும் எனப் புதுவைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.


