News August 9, 2024
புதுச்சேரி: 62 பவுன் தங்கம் கொள்ளை; 7 பேர் கைது

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி ஜூலை 22-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் கனகவள்ளியை தாக்கி 62 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 13, 2025
புதுவை: மேலாண்மை குழுவினர் அறிவிப்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான மேலாண்மைக் குழுவை அறிவித்துள்ளது. இக்குழுவில் மாநில அமைப்பாளராக அருள் முருகன், இணை அமைப்பாளர்களாக ரவிச்சந்திரன், வெற்றிச்செல்வம், கோகிலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு கட்சி வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News December 13, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிவிப்பு

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வருகிற 15-ம் தேதி நடக்க இருந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் 17-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறும். அதன்படி, அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் ரவிபிரகாஷ் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


