News April 10, 2025

புதுச்சேரி: 3 மாதத்தில் 24 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு

image

புதுவையில் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப வாகன விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 123 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போலீசார் அறிவுரையின் படி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டவும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.

Similar News

News December 6, 2025

புதுவை: வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்&மகன்

image

வாழைக்குளம் அருகே உள்ள அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்(46). இவர் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த விஷாலி என்பவருக்கு ஒரு வழக்கிலிருந்து வரவேண்டிய தொகையை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்பவரும் அவரது தாய் விஜயா என்பவரும் வழக்கறிஞர் சுரேஷிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.

News December 6, 2025

புதுச்சேரி: ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் கைது!

image

புதுச்சேரியில் சாலையைக் கடக்க உதவி செய்வது போல நடித்து, 78 வயது மூதாட்டியிடம் இருந்த 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்ச பணத்தையும் திருடிச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த சாரதா, வள்ளி என்ற இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். மூதாட்டி காசிக்கு செல்வதற்காக தனது தோழியிடம் கொடுத்து வைத்திருந்த நகைகளை திரும்பி வாங்கிக் கொண்டு வரும்போது மூதாட்டியிடம் இருந்து நகையை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

News December 5, 2025

புதுச்சேரி: சுகாதாரத் துறைக்கு கண்டனம்

image

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த போலி மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், ரசாயன கலவைகள் எல்லாம் எங்கிருந்து பெறப்பட்டன. அனுமதி இல்லாமல் புதுச்சேரிக்குள் அவை எப்படி துழைந்தன. இதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இயங்குகின்றனர், இது குறித்து பொதுமக்களுக்கு இந்த அரக வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். இது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!