News April 10, 2025
புதுச்சேரி: 3 மாதத்தில் 24 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு

புதுவையில் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப வாகன விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 123 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போலீசார் அறிவுரையின் படி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டவும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.
Similar News
News December 9, 2025
புதுச்சேரி: பேருந்துகளில் திருடிய பெண் கைது

கோரிமேடு சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் ராஜீ தலைமையில், வடக்கு குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் நீண்ட தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதில் பேருந்துகளில் திருடிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சேர்ந்த சின்னத்தாய் என்ற பெண்னை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் சுமார் 6 பவுன் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
News December 9, 2025
புதுச்சேரி: ஆரோவில் திருவிழா அறிவிப்பு

அரோவில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச அரோவில் இலக்கிய விழா (Auroville Literature Festival) வரும் டிசம்பர் 15 முதல், 21 வரை ஒரு வார காலத்திற்கு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கு நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டது.
News December 8, 2025
புதுச்சேரி: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர்

காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியான கருவடிகுப்பத்தில், U டிரைனேஜ் வடிவுக்கால் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஏற்பாட்டில், அரசு நிகழ்ச்சியாக அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அஇஅதிமுக மாநில செயலாளர் அன்பழகன், அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


