News April 10, 2025

புதுச்சேரி: 3 மாதத்தில் 24 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு

image

புதுவையில் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப வாகன விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 123 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போலீசார் அறிவுரையின் படி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டவும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.

Similar News

News December 31, 2025

புதுச்சேரி போலீசார் ஆலோசனைக் கூட்டம்

image

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசாருக்கு பணி ஒதுக்கீடு குறித்த, ஆலோசனைக் கூட்டம் நேற்று கடற்கரை சாலை உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் நள்ளிரவு 12:30 மணிக்கு இசை நிகழ்ச்சி நிறைவுபெறும் கடற்கரையில் கூடியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். சுற்றுலா பயணியுடன் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என சீனியர் எஸ்.பி கலைவாணன் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

News December 31, 2025

புதுவை: ஆபரேஷன் ‘த்ரிஷூல்’ – 4 பேர் கைது

image

சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்துவதற்காக, புதுச்சேரி யூனியன் பிரதேச போலீசார் நேற்று ஆபரேஷன் ‘த்ரிஷூல்’ நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த நடந்த இந்த நடவடிக்கையானது புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது . ‘த்ரிஷூல்’ ஆபரேஷன் முடிவில் மொத்தம் 185 குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் ஆயுதம் வைத்திருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

News December 31, 2025

புதுவை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!