News April 10, 2025

புதுச்சேரி: 3 மாதத்தில் 24 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு

image

புதுவையில் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப வாகன விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 123 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போலீசார் அறிவுரையின் படி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டவும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.

Similar News

News November 22, 2025

புதுவை: சமூக வலைதள பதிவுகள் கூடாது – எஸ்எஸ்பி எச்சரிக்கை

image

புதுச்சேரியில் சமூக ஊடகங்களில் மற்றும் வலைதளங்களில் ரவுடிகள், History Sheeters அல்லது வன்முறையை ஊக்குவிக்கும் பதிவுகள்/கணக்குகள் தற்போதுபதிவிடப்படுகிறது. இதன் மீது தற்போது புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பு பணிகளை தொடங்கியுள்ளது. இத்தகைய உள்ளடக்கங்களை உருவாக்கும், பகிரும் எவர் மீதும் BNS உட்பட கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எஸ்எஸ்பி எச்சரித்துள்ளார்.

News November 22, 2025

புதுவை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

புதுவை மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <>கிளிக் <<>>செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

புதுவை: அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர்

image

புதுவை மின்துறை தலைவர் கனியமுதன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளர். அதில், ‘புதுவையில் மின் மீட்டர்களை ஸ்மார்ட் மின் மீட்டராக மாற்ற மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியினை மத்திய அரசு நிறுவனமான பிஎப்சிசிஎல் நிறுவனம், அப்ராவா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மின் மீட்டரை மாற்ற எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது’ என இவ்வாறு கூறினார்.

error: Content is protected !!