News September 29, 2025
புதுச்சேரி வரலாறு குறித்த நூல் வெளியீடு

புதுச்சேரியின் வரலாறு பற்றி பேராசிரியர் ராமானுஜம் இதுவரையில் 1674 பிரெஞ்சியர் ஆட்சி தொடங்கி 1954-ல் பிரான்சின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற்றது வரையில் நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சிந்தியா – பிரான்சிலிருந்து விடுவிப்பும் இந்தியாவுடன் இணைப்பும் என்ற தலைப்பில் ஐந்தாவது நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி இந்த நூலினை வெளியிட்டார்.
Similar News
News December 8, 2025
புதுவை: கல்லூரி மாணவி தற்கொலை

வில்லியனுார் அருகே கனுவாப்பேடையைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் ரூபிகா(19) B.Sc., படித்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக வில்லியனுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலையும் செய்துள்ளார். இவர் வேலைக்கு சென்று இரவு நேரம் கடந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த ரூபிகா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
புதுச்சேரி: நிதியை தாராளமாக வழங்க கவர்னர் வேண்டுகோள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் எல்லைகளை, இரவு-பகலாக பாதுகாக்கும் நம்முடைய இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப் படை வீரர்கள் அனைவருக்கும் கொடிநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய ஒற்றுமையை, தேசப் பற்றை மேலும், வலுப்படுத்தும் விதமாக கொடிநாள் நிதி தாராளமாக வழங்க வேண்டும் என்றார்.
News December 7, 2025
புதுச்சேரி: திருப்பணி ஆணை வழங்கிய சபாநாயகர்

அபிஷேகப்பாக்கம் விநாயகர், முத்தாலம்மன், நல்லதம்பி அய்யனார் ஆலய திருப்பணிகள் நடைபெறுவதற்கு குழு அமைக்கப்பட்டது. அதற்கான ஆணையை சபாநாயகர் செல்வம் இன்று வழங்கினார். தலைவராக முருகப்பன், பொருளாளராக சிங்கிரிக்குடி பெருமாள் கோயில் நிர்வாக அதிகாரி, தாசில்தார் பிரித்திவி மற்றும் 21 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை திருப்பணி குழு தலைவர் முருகப்பன் மற்றும் உறுப்பினர் பெற்றுக் கொண்டனர்.


