News June 26, 2024
புதுச்சேரி மேலும் ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் என்பவர் இன்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ராமநாதன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: ஆசிரியர் பணிக்கான முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச பட்டியல், வயது உச்சவரம்பு, கல்வித்தகுதி, பதவி உயர்வு உள்பட நியமன விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் https://schooledn.py.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
News December 2, 2025
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை, பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 360 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி இன்னும் 2 மாதத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு, தேதி விவரத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்தார்.
News December 2, 2025
புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


