News June 26, 2024
புதுச்சேரி மேலும் ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் என்பவர் இன்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ராமநாதன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 18, 2025
சனிக்கோளை பார்க்க புதுவையில் ஏற்பாடு!

வானில், சனிக் கோளின் எதிர்நிலை நிகழ்வு நடக்க உள்ளது. அதையொட்டி, அப்துல் கலாம் அறிவியல் மையம் & கோளரங்கம் சார்பில், செப். 21ம் தேதி, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் தொலை நோக்கி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை, மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை காணலாம். இந்த நிகழ்வு பற்றி, இயற்பியல் துறை பேராசிரியர் மதிவாணன் விளக்கம் அளிக்க உள்ளார். இதனை மாணவர்கள், பொதுமக்கள் பார்க்கலாம்.
News September 18, 2025
காரைக்கால்: குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம் திறப்பு

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் அமைச்சர் நமச்சிவாயமும் இன்று துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வீடியோ காணொளி மூலமாக காவல் நிலையத்தை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
News September 18, 2025
புதுச்சேரி முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை

வானிலை ஆய்வு மையம் வெளிட்ட அறிக்கையில் தெற்கு வங்ககடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் சட்டப்பேரவையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது.