News April 20, 2025
புதுச்சேரி: மின்சாரம் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

புதுச்சேரி மின்சாரத் துறை, மக்களிடம் இருந்து புகார் அளிக்கும் முறைகளை எளிதாக்கி, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வருகிறது. அதன்படி புதுவைக்கு – 04132334277, காரைக்காலுக்கு – 04368 222 428 என்ற எண்களை தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் அல்லது மின்சாரத் துறை இணையதளம் http://electricity.py.gov.in மூலம் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE செய்யவும்
Similar News
News December 13, 2025
புதுவை: மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை

புதுச்சேரி, ஊசுட்டேரியில் நேற்று பெலிகான் பறவை (கூழைக்கடா) ஒன்று மீன் வலையில் சிக்கி தண்ணீரில் தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் ஏரியில் மீன் வலையில் சிக்கி தவித்த பெலிக்கான் பறவையை மீட்டு, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு வனத்துறை மருத்துவர் குமரன் பறவைக்கு சிகிச்சை அளித்தார்.
News December 13, 2025
புதுவை: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
புதுச்சேரி: அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சனிக்கிழமையான இன்று (டிச.13) இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சிவகாமி நேற்று தெரிவித்துள்ளார். அதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது பருவத் தேர்வும், +2 மாணவர்களுக்கு முதலாவது மாதிரி பொதுத் தேர்வும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வியாழக்கிழமை அட்டவணையின்படி வகுப்புகள் நடைபெறவுள்ளது.


