News March 29, 2024
புதுச்சேரி: போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்

புதுச்சேரியில் உள்ள பெரிய மார்கெட்டில் கடை வைத்திருக்கும் பெண் மணி ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அண்ணா சாலையில் 7 சவரன் தங்க நகைகளை தவர விட்டுள்ளார். இந்நிலையில், அதனை பெரிய கடை காவலர்கள் மீட்ட நிலையில் அப்பெண்மணியிடம் இன்று காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் நகைகளை ஒப்படைத்தனர். இதனை அடுத்து தவிர விட்ட நகையை கண்டுபிடித்துக் கொடுத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
புதுச்சேரி: ரூ.6.15 கோடி மதிப்பில் பணிகள்

புதுச்சேரி, வில்லியனூர் தொகுதியில் ரூ.6.15 கோடி மதிப்பிலான ‘யு’ வாய்க்கால் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா இன்று தொடங்கி பூமி பூஜை செய்து வைத்தார். பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, அரும்பார்த்தபுரம் மேம்பாலம் அருகே நடைபெற்றது.
News December 22, 2025
புதுச்சேரி AISF மாநில விரிவடைந்த குழுக்கூட்டம்

புதுச்சேரி, அனைத்திந்திய மாணவர் பேரவை (AISF) மாநில விரிவடைந்த குழுக்கூட்டம், மாநிலத் தலைவர் வி.உதயராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் மூடப்பட்டதையும், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சில பேராசிரியர்கள் RSS மற்றும் ABVP போன்ற அமைப்புகளில் பங்கேற்பதையும் கண்டித்து போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
News December 22, 2025
புதுச்சேரி: திடீரென பெண் உயிரிழப்பு

திருநள்ளாறு நளன்குளம் அருகே, நின்று கொண்டிருந்த 70 வயது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? டூரிஸ்ட்டாக வநதவரா என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


