News April 28, 2025

புதுச்சேரி: பெயிண்டருக்கு கத்தி வெட்டு

image

உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கிருஷ்ணகாந்த்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை உறுவையாறு ஏரிக்கரை பகுதியில் கிருஷ்ணகாந்த்தை சந்தோஷ், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 9, 2025

போலீசாருடன் மல்லுக் கட்டும் தொண்டர்கள்

image

புதுவையில் உப்பளம் பழைய துறைமுகம் பகுதியில், தவெக வின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றுகிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர் கூட்டம் அதிகமாக வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் தொண்டர்களை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான தொண்டர்கள் வந்த காரணத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

News December 9, 2025

புதுச்சேரி: விஜய்க்காக மொட்டை அடித்த இளம்பெண்!

image

புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வந்த இளம் பெண் ஒருவர் விஜய்க்காக மொட்டை அடித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில், “ஆட்சி மாற்றம் ஏற்படனும், கரூர் சம்பவத்திற்கு பின் விஜயின் முதல் மக்கள் சந்திப்பு, எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது. இதற்காகதான் மொட்டைய அடிச்சுக்கிட்டேன், என தெரிவித்தார் அவர்.

News December 9, 2025

புதுச்சேரி மக்கள் கவனத்திற்கு

image

புதுச்சேரியில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

error: Content is protected !!