News April 28, 2025
புதுச்சேரி: பெயிண்டருக்கு கத்தி வெட்டு

உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கிருஷ்ணகாந்த்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை உறுவையாறு ஏரிக்கரை பகுதியில் கிருஷ்ணகாந்த்தை சந்தோஷ், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 28, 2025
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் உமா சங்கர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ரவுடி கருணா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரில் தலைமறைவாக இருந்த கர்ணாவை வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கருணா கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் வெளிவராத பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சஞ்சய் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
News April 28, 2025
பாண்டிச்சேரியில் பாகிஸ்தான் பெண்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பல நடவடிக்களை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுவையில் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பஷியா பானு விசா கெடு முடிவடைந்த நிலையில் அவர் நாட்டை விட்டு செல்லாமல் இருப்பதால் அவர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News April 28, 2025
புதுவை வெண்கட்டா நகர் பகுயிதியில் மின் தடை அறிவிப்பு

புதுவை வெங்கட்டா நகர் மின் நிலையத்தில் நாளை (29-4-25) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் 1 மணி வரை ரெயின்போ நகர், செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர் , திருவள்ளுவர் நகர், பெருமாள் கோவில் வீதி, தியாகராஜா வீதி, அண்ணா சாலை, கருவூலசாலை, காந்தி வீதி, பாரதி வீதி, ஜமீன்தார் கார்டன்மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை என மின்துறை அறிவித்துள்ளது.