News April 13, 2025
புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 27, 2025
புதுவை: தெலுங்கானா தொழிலாளி உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

தெலுங்கானாவை சேர்ந்த வெங்கடய்யா என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த குன்ன வெங்கடேஷிடம் புதுவையில் ஒப்பந்த அடிப்படையில், வேலை செய்தார். வெங்கடய்யாவுக்கு, உடல்நிலை சரியில்லாததால், அவரை, தெலுங்கானாவுக்கு அனுப்ப குன்ன வெங்கடேஷ் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றபோது, வெங்கடய்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்தார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News November 27, 2025
புதுவை: பரிசுப் பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நாள்காட்டிகள் (காலண்டர்களை) உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நமது மக்கள் கழக தலைவருமான நேரு, இன்று காந்தி வீதி – வெள்ளாள வீதி இணைப்பு பகுதியில் உள்ள கங்கை விநாயகர் கோயிலில் இருந்து கிறிஸ்துமஸ், 2026-புத்தாண்டு, பொங்கல் மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள் கூறி காலண்டர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
News November 27, 2025
புதுவை: பரிசுப் பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நாள்காட்டிகள் (காலண்டர்களை) உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நமது மக்கள் கழக தலைவருமான நேரு, இன்று காந்தி வீதி – வெள்ளாள வீதி இணைப்பு பகுதியில் உள்ள கங்கை விநாயகர் கோயிலில் இருந்து கிறிஸ்துமஸ், 2026-புத்தாண்டு, பொங்கல் மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள் கூறி காலண்டர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.


