News April 13, 2025
புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News December 12, 2025
புதுச்சேரி: ரவுடி மீது துப்பாக்கிச் சூடு!

திருவெற்றியூரில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக ஏன்னூர் சுனாமி குடியிருப்பில் பதுங்கியிருந்த, புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி பட்டு விக்கியை பிடிக்க போலீசார் முயற்சி செய்தனர். அப்பொழுது பிடிக்க வந்த உதவி ஆய்வாளர் நவீன் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்ப முயன்ற ரவுடி விக்கியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த விக்கி தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News December 12, 2025
புதுச்சேரி: ரவுடி மீது துப்பாக்கிச் சூடு!

திருவெற்றியூரில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக ஏன்னூர் சுனாமி குடியிருப்பில் பதுங்கியிருந்த, புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி பட்டு விக்கியை பிடிக்க போலீசார் முயற்சி செய்தனர். அப்பொழுது பிடிக்க வந்த உதவி ஆய்வாளர் நவீன் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்ப முயன்ற ரவுடி விக்கியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த விக்கி தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News December 12, 2025
புதுவை: மருத்துவக் கல்லூரியில் சேர அவகாசம்

புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று இட ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் வெளியிட்டது. அதன்படி 283 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசம் தற்போது 13-ம் தேதி மாலை 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.


