News April 13, 2025
புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News October 23, 2025
புதுச்சேரி: அதிகாரிகள் நியமிக்க விண்ணப்பம் வரவேற்பு

கோரிமேடு ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நெகி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் 66 உள்ளிருப்பு மருத்துவ அதிகாரிகள் பணியிடங்கள், 6 மாத காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான நேர்முக தேர்வுக்கு விண்ணப்பிக்க, நவம்பர் 3ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
News October 23, 2025
புதுச்சேரி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <
News October 23, 2025
புதுச்சேரி: புதிதாக விண்ணப்பிக்க அறிவிப்பு

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அந்த வலைதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், இத்துறை தொழில்நுட்ப பிரச்சினையை நிவர்த்தி செய்து வருகிறது. எனவே, விண்ணப்பித்த நபர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.