News April 10, 2025
புதுச்சேரி டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் எச்சரிக்கை

புதுச்சேரி காவல் தலைமையகத்தில் நேற்று (ஏ.09) இரவு செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், “வேலைவாய்ப்பு, கடனுதவி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் அரஸ்ட் என மர்ம கும்பல் பேசி மோசடி செய்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். இதை பிறருக்கும் SHARE செய்யுங்க
Similar News
News December 24, 2025
புதுவை: விபத்தில் சிக்கிய முதியவர்!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (67) என்பவர் நேற்று முன்தினம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குச் செல்வதற்காகத் திருநள்ளாறு – அம்பகரத்தூர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில், காரைக்கால் வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 24, 2025
புதுவை: விபத்தில் சிக்கிய முதியவர்!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (67) என்பவர் நேற்று முன்தினம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குச் செல்வதற்காகத் திருநள்ளாறு – அம்பகரத்தூர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில், காரைக்கால் வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 24, 2025
புதுச்சேரி: கடலுக்கடியில் பரதநாட்டியம் ஆடிய சிறுமி

சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சிறுமி ஆராதனா ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவர் ராமேஸ்வரம் அருகே உள்ள கடல் பகுதியில் சுமார் 20 அடி ஆழத்தில், முழுமையான பரதநாட்டிய உடையில், ஆபரணங்கள் மற்றும் ஒப்பனையுடன் நிலப்பரப்பில் உள்ள மேடையில் ஆடுவது போல மிக நேர்த்தியாக நடனமாடியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


