News April 10, 2025
புதுச்சேரி டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் எச்சரிக்கை

புதுச்சேரி காவல் தலைமையகத்தில் நேற்று (ஏ.09) இரவு செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், “வேலைவாய்ப்பு, கடனுதவி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் அரஸ்ட் என மர்ம கும்பல் பேசி மோசடி செய்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். இதை பிறருக்கும் SHARE செய்யுங்க
Similar News
News November 7, 2025
புதுவை: 4 பேருக்கு பணி நியமன ஆணை

புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காலியாக இருந்த பணியிடங்கள் போட்டித் தோ்வு வாயிலாக நிரப்பப்பட்டன. முதன்மை தோ்வுப் பட்டியலில் இருந்தவா்களில் சிலா் பணியில் சேரத் தவறியதால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப காத்திருப்புப் பட்டியலில் உள்ளவா்களைக் கொண்டு 4 போ் பணியில் நியமிக்கத் தோ்வு செய்யப்பட்டனா். நான்கு தீயணைப்பு வீரா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் ரங்கசாமி நேற்று சட்டப்பேரவையில் வழங்கினார்
News November 7, 2025
புதுவை: நடைபாதையில் இறந்து கிடந்த முதியவர்

புதுவை கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் அருகில் நேற்று நடைபாதையில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த லாஸ்பேட்டை போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
புதுவை: சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

மெகபூ பாஷா என்ற சட்டக் கல்லூரி மாணவர் கருவடிக்குப்பம் மெயின்ரோட்டில் தனது உறவினரின் சூப் கடையில் பகுதி நேர வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று சூப் கடைக்கு வந்த வைத்திக்குப்பம் கடவுள், தேவா, கண்ணன் ஆகியோர் பீப் பக்கோடா கேட்டனர். அதற்கு மெகபூ பாஷா சற்று காத்திருக்க கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மெகபூ பாஷாவை சரமாரியாக தாக்கினர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்


