News April 6, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்
Similar News
News April 14, 2025
புதுவையில் சுற்றுலா பயணி தொலைத்த நகை ஒப்படைப்பு

புதுச்சேரி அடுத்த ஒதியஞ்சாலை காவல் நிலைய பகுதியான பழைய கோர்ட் அருகே சுற்றுலாப் பயணி தவறவிட்ட ஏழு சவரன் தங்க நகை மற்றும் 3 ஃபோன் மற்றும் ஒரு லேப்டாப் பேகை காவல் நிலையத்தில் தலைமை காவலர் ஒப்படைத்தார். இதனை அடுத்து இன்று காணாமல் போன பொருட்களை உரியவர்களிடம் ஒதியஞ்சாலை காவல் நிலைய போலீசார் ஒப்படைத்தனர். மேலும், அந்த காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
News April 14, 2025
புதுவை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

புதுவையில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 044-28 59 28 28 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 14, 2025
மற்றவர்களுக்கு சிம்கார்டு வாங்கி தராதீர்கள் – போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி இணையவழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நேற்று வெளியிட்ட செய்தியில், இணையவழி குற்றங்களில் 85 சதவீதம் ஆன்லைனில் பணம் இழப்பது சம்பந்தமாக நடக்கிறது. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுப்பவர்களை சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பித்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் முன்பின் தெரியாதவர்களுக்கு சிம் கார்டு வாங்கி தர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.