News April 6, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்

Similar News

News November 16, 2025

வில்லியனூர் அதிக குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி சாவு

image

புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் சதீஷ்( 38)
பெயிண்டர். இவர் தந்தை சேகர் (64)கூலி தொழிலாளி. இவரது குடி பழக்கத்தால் இவருக்கு ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய்
இருந்தது. இவர் சில நாட்களாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வராமல்
இருந்துள்ளார். இதனிடையே
தனியார் வணிக வளாகத்தில் சேகர்
இறந்து கிடப்பதாக சதீஷூக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 16, 2025

லாஸ்பேட் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்தவர் கைது

image

புதுவை லாஸ்ட்பேட் கருவடிக்குப்பம் பகுதியில் மர்மநபர் ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37) என்பது தெரியவந்தது இதையடுத்து அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் செய்தனர்.

News November 16, 2025

காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நவ.17(திங்கள்கிழமை) அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக இருந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. இந்த மாத குறைதீர்ப்பு முகாமுக்கான புதிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!