News April 6, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்
Similar News
News December 14, 2025
புதுவை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.
News December 14, 2025
ஆந்திரா சென்று ரூ.6 லட்சத்தை மீட்ட புதுச்சேரி போலீசார்

புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியில் மூதாட்டியிடம் கடந்த மாதம் 24-ந்தேதி 22 பவுன் நகை, ரூ.1,10,000 ரொக்கம் பறித்த சென்ற வழக்கில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வள்ளி, சாராத ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது பணத்தை அவர்கள் ஆந்திராவில் பதுக்கி வைத்துள்ளதாக கூறியதை தொடர்ந்து, குற்றவாளிகளை அழைத்து கொண்டு ஆந்திரா சென்ற புதுச்சேரி போலீசார் ரூ.6 லட்சம் பணத்தை அதிரடியாக மீட்டனர்.
News December 14, 2025
புதுச்சேரி பள்ளி மாணவி சாதனை

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி காவிய ஸ்ரீ, இளம் திறமையாளர்களுக்கான ‘கீர்த்தி புரஸ்கார்’ விருது மற்றும் நடனத்திற்கான தமிழக அரசின் சிறப்பு விருது பெற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து நேற்று பள்ளியில் நடந்த விழாவில் மாணவிக்கு பள்ளியின் இயக்குநர் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார்.


