News March 28, 2025
புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி, வரும் 15ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. பகுதியில் 20 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அமைக்கப்பட்டுள்ளன. பகுதியில் 146 தனியார் பள்ளிகளை பள்ளிகளைச் 7,278 பேரும், 573 தனித் தேர்வர்களும், காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 497 பேரும், 284 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
Similar News
News November 25, 2025
புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

புதுவை கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று(நவ.25) நடைபெற உள்ளது. இதனால் காலை 10 மணி முதல் மதியம் 3 வரை பீமன் நகர் ஒரு பகுதி அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞான தியாகு நகர், ராகவேந்திரா நகர், பிவிபி நகர் ஒரு பகுதி, தட்டாஞ்சாவடி ஒரு பகுதி, கவுண்டன் பாளையம் ஒரு பகுதி, இசிஆர் பழனிராஜா உடையார் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
News November 25, 2025
புதுவை: வெளிநாட்டு மாணவரை தேடி பிடித்த போலீசார்

ருவாண்ட நாட்டை சேர்ந்த சேமா மன்சி பபரீஷ்(35) என்பவர் சிதம்பரம் அண்ணாமலை ப.கழகத்தில் பட்டம் படித்த பின், புதுவை ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார். இவரது விசா காலம் கடந்த அக்டோபரில் முடிவடைந்த நிலையில், விசா புதுப்பிக்கப்படவில்லை. புதுவையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலர்கள் இவரை தேடிய நிலையில், முதலியார்பேட்டை தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரிந்து அவரை நேற்று போலீசார் பிடித்தனர்.
News November 25, 2025
புதுச்சேரி: மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்லாதீர்

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் இன்று (நவ.24) வெளியிட்டுள்ள செய்தியில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி நாளை 25-ந்தேதி முதல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று
தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றார்


