News April 9, 2025

புதுச்சேரி அதிகாரிகள் 4 பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து

image

மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, அறிவியல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் யாசம் லக்க்ஷ்மிநாராயண ரெட்டி, வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூர், தொழில்துறை இயக்குனர் ருத்ரகௌடு ஆகிய 4 அதிகாரிகள் பதவி மூப்பின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்

Similar News

News November 28, 2025

புதுச்சேரி: பாஜக தேசிய பொதுச்செயலாளருக்கு வரவேற்பு

image

புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாஜக தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) சந்தோஷ் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். அவரை தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அப்போது பாஜக மாநில தலைவர் வி.பி ராமலிங்கம் உடன் இருந்தார்

News November 28, 2025

புதுச்சேரி: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், நாளை (நவ.29) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

புதுச்சேரி: சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது

image

மத்திய அரசின் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் மீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், செல்லிப்பட்டு பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். செல்லிப்பட்டு சாலை சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏ ஆதரவாளர்கள், பொதுமக்கள் போராட்டம் செய்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் உட்பட அனைவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!