News March 19, 2024

புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமம்

image

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்பு எப்போதும் தொடரும், ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாகத்தான் இருக்கின்றது, மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு செல்கின்றேன் ஆகவே நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கின்றேன் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வேன் என்றார்.

Similar News

News December 18, 2025

புதுவை: 10th போதும் ரூ.69,100 சம்பளம்

image

புதுவை மற்றும் காரைக்கால் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28, OBC–26)
5. கடைசி தேதி: 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இத்தகவலை SHARE செய்து வேலை தேடுபவர்களுக்கு உதவுங்க…

News December 18, 2025

புதுச்சேரி: வாய்க்காலில் தவறி விழுந்த பசுமாடு

image

புதுச்சேரி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபம் அருகில் உள்ள பெரிய சைடு வாய்க்காலில் பசுமாடு ஒன்று நேற்று தவறி விழுந்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்களால் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த ஊழியர்கள் அரியாங்குப்பம் காவல்துறை ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டு, தீயணைப்புத் துறை வரவழைத்து வெகு நேரமாக உயிருக்குப் போராடிய அந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

News December 18, 2025

புதுவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

image

கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோரிமேடு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வல்லரசு, பெங்களூரைச் சேர்ந்த இப்ராகிம் என இருவரை ரகசியத் தகவலின் பேரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!