News March 19, 2024
புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமம்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்பு எப்போதும் தொடரும், ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாகத்தான் இருக்கின்றது, மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு செல்கின்றேன் ஆகவே நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கின்றேன் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வேன் என்றார்.
Similar News
News December 18, 2025
புதுவை: தீவிர போலியோ சொட்டு மருந்து குறித்த ஆலோசனை

காரைக்கால் மாவட்டத்தில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துணை மாவட்ட ஆட்சியர் செந்தில்நாதன் தலைமையில், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர். சிவராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இதற்காக காரைக்கால் முழுவதும் 79 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
News December 18, 2025
புதுவை: LJK கட்சியில் இணைந்த பிக் பாஸ் நடிகர்

தவெக தலைவர் விஜயிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி LJK-வில் இன்று (டிச.18) இணைந்தார். புதுச்சேரியில், லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, தன்னை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர்கள் லியோகுமார், சுனில்குமார், குமரன் மற்றும் சிவராமன் ஆகியோர் உடன் இணைந்தனர்.
News December 18, 2025
புதுவை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!


