News March 19, 2024
புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமம்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்பு எப்போதும் தொடரும், ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாகத்தான் இருக்கின்றது, மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு செல்கின்றேன் ஆகவே நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கின்றேன் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வேன் என்றார்.
Similar News
News September 19, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீனியர் எஸ்.பி நித்யா ராதாகிருஷ்ணன் வாட்ஸ்அப்/இன்ஸ்டாகிராம்/ஃபேஸ்புக்/டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தெரியாத நம்பர்களிலிருந்து ஆன்லைன் வர்த்தகத்தைப்பற்றி வரும் செய்திகளை நம்பவேண்டாம் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால் அதனைகொடுக்க வேண்டாம் என்றனர். SHARE IT
News September 19, 2025
புதுவை அரசு கல்லூரியில் கேட்வே டூ பிரான்ஸ் 2.0

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், பிரெஞ்சு துறை & தர உறுதியளிப்பு குழு சார்பில் ‘கேட்வே டூ பிரான்ஸ் 2.0’ என்ற வழிகாட்டுதல் கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். பிரெஞ்சு பேராசிரியர் திருவேங்கடம் வரவேற்றார். கேம்பஸ் பிரான்ஸ் நிறுவன மேலாளர் ஸ்ருதி மரியம் ஜோசப், பிரான்சில் உயர்கல்வி வாய்ப்புகள், சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கினார்.
News September 19, 2025
புதுவை: டீசல் மானியம் அறிவித்த முதல்வர்

புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட எப்.ஆர்.பி. கட்டுமர உரிமையாளர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட டீசல் நிலையத்தில் டீசல் கொள்முதல் செய்யும் உரிமையாளர்களுக்கு வாட் வரிவிலக்கு அளிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் கூடுதலாக 3,208 உரிமையாளர்களுக்கு டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.12 வழங்கப்பட உள்ளது.