News March 19, 2024

புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமம்

image

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்பு எப்போதும் தொடரும், ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாகத்தான் இருக்கின்றது, மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு செல்கின்றேன் ஆகவே நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கின்றேன் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வேன் என்றார்.

Similar News

News December 19, 2025

புதுவை: போலியோ சொட்டு மருந்து முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் டிசம்பர் 21-ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் 74,698 குழந்தைகள் பயனடைவார்கள். மொத்தம் 425 முகாம்களிலும், பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பூங்கா, கோவில், வணிக வளாகம் உள்ளிட்ட 31 பொது இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படும் என புதுச்சேரி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

News December 19, 2025

புதுவை: அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி!

image

புதுச்சேரி தொழிலாளர் துறைச் செயலர் ஸ்மித்தா, “புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பகம், அரசு வேலைக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://labour.py.gov.in இணையத்தில் உள்ள படிவத்தை இன்று (டிச.19) காலை 9:30 மணி முதல் வரும் 28-ம் தேதி மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.” என கூறியுள்ளார்.

News December 19, 2025

புதுவை: ஊக்கத் தொகை பட்டியல் வெளியீடு

image

தோட்டக்கலை இணை வேளாண் இயக்குநர், “வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன்படி மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.7,000, தென்னை சாகுபடி பெயர் பட்டியலில் உள்ளக் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.” என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!