News March 26, 2025
புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுவையில் உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்” என தெரிவித்தார்.
Similar News
News September 16, 2025
புதுவையில் ஒரே நேரத்தில் 9 பைக்குகள் நாசம்

புதுவை உருளையன்பேட்டை வேல்முருகன், டிப்பர் லாரி டிரைவர். இவர், நேற்று புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரியை ஓட்டி வந்தார். மொரட்டாண்டி பகுதியை கடந்து சாலையோரம் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு, ஆப் செய்யாமல்
கீழே இறங்கி தண்ணீர் பிடிக்க சென்றபோது லாரி நகர்ந்து ஓடி அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தியிருந்த 9 பைக்குகள் மீது மோதி சேதப்படுத்தியது. இது குறித்து ஆரோவில் போலீசார் விசாரித்தனர்.
News September 16, 2025
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உழவர்கரை நகராட்சியினர் நேற்று கோரிமேடு திண்டிவனம் பிரதான சாலையில் புதுச்சேரி எல்லை முதல் ஞானுதியாகு நகர் வரை சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்திற்க்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த நான்கு பங்கு அமைப்பு மற்றும் சாலையோர கடைகளை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றபட்ட இடத்தை தொடர்ந்து பாதுகாக்க ஜிப்மர் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
புதுச்சேரி: தனியார் மழலையர் பள்ளியில் தீ விபத்து

புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே தனியார் மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் புதுச்சேரியை சேர்ந்த 10 ஆசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். தீடிரென சுவிட்சு பாக்ஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது, இதில் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், உடனே தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.