News March 26, 2025

புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

image

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுவையில் உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்” என தெரிவித்தார்.

Similar News

News December 14, 2025

புதுவை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News December 14, 2025

ஆந்திரா சென்று ரூ.6 லட்சத்தை மீட்ட புதுச்சேரி போலீசார்

image

புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியில் மூதாட்டியிடம் கடந்த மாதம் 24-ந்தேதி 22 பவுன் நகை, ரூ.1,10,000 ரொக்கம் பறித்த சென்ற வழக்கில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வள்ளி, சாராத ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது பணத்தை அவர்கள் ஆந்திராவில் பதுக்கி வைத்துள்ளதாக கூறியதை தொடர்ந்து, குற்றவாளிகளை அழைத்து கொண்டு ஆந்திரா சென்ற புதுச்சேரி போலீசார் ரூ.6 லட்சம் பணத்தை அதிரடியாக மீட்டனர்.

News December 14, 2025

புதுச்சேரி பள்ளி மாணவி சாதனை

image

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி காவிய ஸ்ரீ, இளம் திறமையாளர்களுக்கான ‘கீர்த்தி புரஸ்கார்’ விருது மற்றும் நடனத்திற்கான தமிழக அரசின் சிறப்பு விருது பெற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து நேற்று பள்ளியில் நடந்த விழாவில் மாணவிக்கு பள்ளியின் இயக்குநர் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார்.

error: Content is protected !!