News September 14, 2024
புதுச்சேரியில் 1464 மாணவர்கள் தேர்வு

புதுச்சேரியை பூர்வீமாக கொண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை சுகாதார துறை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 1464 மாணவர்களது பெயர்கள், அவர்கள் எடுத்த மதிப்பெண்ணுடன் இடம் பெற்றுள்ளது. பொது பிரிவினை சேர்ந்த மாணவி தர்ஷினி 99.99 சதவீத மதிப்பெண்ணுடன் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
புதுவை: தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

கோட்டிச்சேரியை சேர்ந்தவர் ராணி(68). இவரது கணவர் நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், இவர்களது 4 மகன்களும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனியே வசித்து வரும் ராணி, தனக்கு வாழப் பிடிக்கவில்லையென கூறி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 26, 2025
புதுவையில் இன்று மின் தடை அறிவிப்பு

புதுச்சேரி, திருபுவனை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாகூர் மற்றும் பண்டசோழநல்லூர் மின்பாதைகளில், இன்று(நவ.26) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பாகூர், பாகூர் பேட், கன்னியா கோயில், புதுநகர், மூர்த்திக்குப்பம், நிர்ணயப்பட்டு குடியிருப்பு, பாளையம், சேலிய மேடு, அரங்கனூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று புதுச்சேரி மின்துறை பொறியாளர் தெரிவித்துள்ளார்.


